ஏறாதீங்க!
ஏறினப்பறம்
என்ன செய்யலாம்ன்னு யோசிக்கிறதைவிட
நல்லது என்ன? ட்ரெய்ன்ல
ஏறாமலே இருக்கறது,
இல்லையா?
:-)) வாழ்க்கையில
எப்பவுமே எல்லா சமயமும் நாம
நினைச்ச மாதிரி எதுவும்
நடக்கறதில்லே. அதுக்காக
ஒவ்வொரு தரமும் ட்ரெய்ன்ல
ஏறிக்கொண்டு இருந்தா எப்படி?
ஏமாற்றங்கள்,
கருத்து
வேறு பாடுகள், சவால்கள்
எல்லாமே எப்பவும் இருந்துகிட்டுத்தான்
இருக்கும். இதெல்லாம்
உங்களை ட்ரெய்ன்ல ஏத்த
முயற்சிக்கும். ஆனா
இவற்றுக்கெல்லாம் எதிர்வினைகளை
நாம் செய்ய மத்த தேர்வுகள்
எப்பவுமே இருக்கும்!
உங்களோட
வழக்கமாக ட்ரெய்ன் எதுன்னு
தெரிஞ்சா அதுல ஏறாம இருக்கறது
இன்னும் சுலபம். அடையாளம்
தெரியாட்டாத்தான் கஷ்டம்.
உதாரணமா
“எனக்கு சலிப்பா இருந்தா
அப்பா அம்மா கவனத்தை ஈர்க்க
ஏதாவது எரிச்சலூட்டறா மாதிரி
நடந்துப்பேன்!” இப்படி
இருக்கலாம். அதுக்கு
இப்படி எரிச்சலூட்டறா
மாதிரித்தான் நடந்துக்கணும்ன்னு
இல்லையே? சலிப்பா
இருந்தா ஒரு புத்தகம் படிங்க;
சித்திரம்
வரைங்க. எழுதுங்க,
வெளியே போய்
விளையாடுங்க… ஆயிரம் வழியிருக்கு!
ட்ரெய்ன்
இன்னும் பல விதமா இருக்கலாம்.
அதனால இது
பத்தி யோசிங்க!
இதெல்லாம்
எதுக்கு செய்யறோம்ன்னு
தெரியுமா? நாம
சந்தோஷமா இருக்கத்தான்!
-நிறைந்தது!-