நாம்
பாக்கிறது எல்லாமே -நம்மையும்
சேத்து- நம்
கண்கள் வழியா உள்ளே போகுது.
கண்கள் தானா
எதையாவது பார்க்குமா?
மனசு எதை
பார்க்குமோ அதைத்தானே
பார்க்கும்? நம்ம
மனசோ அழுக்கான கண்ணாடி மாதிரி.
நம்மோட
அனுபவம், நம்பிக்கைகள்,
‘மூட்’’
கள்…. இதெல்லாம்
நாம பார்க்கிறதை உள்ளபடி
பார்க்காம நம் கருத்தை ஏத்தி
பார்க்க வைக்குது. பல
சமயம் நாம் பார்க்கிற நாம்
வேற; மத்தவங்க
பார்க்கிற நாம் வேற;
உண்மையான
நாம் வேற!
இவற்றுக்குள்ள
இருக்கிற இடைவெளியை சரியா
அறிவது நல்லது, அப்பதான்
நாம சரியா சுய விழிப்புணர்வை
அடையலாம். வெளியிருந்து
உள்ளே, உள்ளிருந்து
வெளியே நம்மை நாமே முழுக்க
அறியணும். வெளியிருந்து
அறியணும்ன்னா நாம் நம்மை
விலகி இருந்து பார்க்கணும்.
ஆனா நம்மோட
அஹங்காரம் அதுக்கு விடாது.
அதனால யாரானா
இரண்டாம் நபர் வேணும்.
அது ஒரு
நண்பரோ, சக
ஊழியரோ, மேற்பார்வையாளரோ,
குடும்பத்தினரோ
அல்லது நாம் மதிக்கும் ஒரு
பெரியவராகவோ இருக்கலாம்.
நாம் அவங்ககிட்ட
நம்மை பத்தி கேட்க்கும் போது
நீ இப்படின்னு சொல்கிறப்ப
முடிஞ்சா அதுக்கு உதாரணத்தையும்
கேளுங்க. ஏதோ
ஒரு நிகழ்வை வெச்சுத்தானே
அப்படி ஒரு முடிவுக்கு வந்தாங்க?
இப்படி
கிடைக்கற விமரிசனம் எல்லாத்தையும்
சேர்த்து வெச்சு பார்த்தா
நம்மோட உணர்ச்சிகள்,
அவை எப்படி
மத்தவங்களை பாதிக்கிறது
எல்லாம் புரிஞ்சுடும்.
ஆனா
இந்த விமர்சனங்களை தாங்கிக்கற
தைரியமும் நமக்கு வேணும்.
விமரிசனத்தை
வெளிப்படையா சொல்கிற அவங்களை
நாம் கோவிச்சுக்கவும் கூடாது.
தயங்காம
வெளிப்படையா சொல்லலைன்னா
அவங்ககிட்ட இதை கேட்டு
பிரயோசனமும் இல்லை.
‘சிங் சிக்’
அடிக்கற கூட்டத்தால கெட்டுப்போனவங்க
பலர் இருக்காங்க!
இந்த
நபர்களை தேர்ந்து எடுக்கறதுல
கொஞ்சம் ஜாக்கிரதையாவே
இருக்கணும். இவர்
கொஞ்சமாவது ஆப்ஜக்டிவா
எல்லாத்தையும் பார்க்கிறவரா
இருக்கணும். நம்பிக்கைக்கு
உரியவரா இருக்கணும்.
நல்ல
விமர்சகர் கிடைச்சு நாமும்
நல்லபடியா அதை ஆராய முடிஞ்சா
சுய விழிப்புணர்வுல நாம மிக
உன்னத நிலைக்குப்போயிடுவோம்!