Saturday 29 October 2016

உணர்வு சார் நுண்ணறிவு - பாகம் 2


போன பதிவில் கொடுத்த சுட்டிகள் மூலம் அடிப்படையை புரிந்து கொண்டு இருப்பீர்கள்ன்னு நினைக்கிறேன். இருந்தாலும் சில அடிப்படைகளை திருப்பியும் பார்த்துவிட்டு மேலே போகலாம்.
உலகத்தில இருக்கிற மக்களில 36% மக்கள் மட்டுமே தம் உணர்வு நிலையை சரியாக புரிஞ்சு கொண்டு இருக்கிறாங்க. மத்தவங்களுக்கு தான் இருக்கும் நிலை தெரியவில்லை; அவர்களை உணர்வுகள் ஆட்டுவிக்கிறது!

பள்ளிகளில இதெல்லாம் சொல்லித்தரதில்லை. மனப்பாடம் பண்ணு. அப்படியே பரிட்சையில் எழுது; மார்க் வாங்கு. அவ்ளோதான் எதிர்பார்ப்பு. நீ கோபமான பையனா இருந்தா என்ன? இல்லை அடிக்கடி அழற பையனா இருந்தா எனக்கென்ன? பிரச்சினை அதிகமா இருந்தா வீட்டுக்கு கூட்டிப்போக சொல்லிடலாம். அவ்ளோதான். இதனாலேயே நிறைய மார்க் வாங்கின புத்திசாலிப் பசங்களும் வாழ்க்கையில வெற்றி அடையறது நிச்சயமில்லை!

தம் உணர்வைப்பற்றி சொல்லுவோர் ஓராயிரம் விதங்களில் சொல்லுகிறாங்க!
இருந்தாலும் அவை அத்தனையும் அடிப்படையில் ஐந்து மட்டுமே: மகிழ்ச்சி, சோகம், கோபம், பயம், அவமானம். மற்றவை எல்லாம் இவற்றோட கலவைகள்.

சாதாரணமாக யாரும் புத்தி என்ற நிலையிலேயே இருக்கறதில்லை. மனம் எங்கே இருக்கோ அங்கேயே உணர்வுகளும் இருக்கும். நம்மை சதா சர்வ காலமும் மனசு அலைக்கழித்துக்கொண்டுதான் இருக்கு. உணர்வுகளின் சிக்கலான பின்னலில் தவிக்கிறோம். உணர்வுகள் எத்தனை பலமாக இருக்கிறன, எதனுடன் கூட்டு சேர்ந்து இருக்கு என்பது மட்டுமே வித்தியாசப்படும். இவை எல்லாம் நம் கவனத்தில் இருக்கோ இல்லையோ இவை எல்லாம் இயல்பா இருந்து கொண்டுதான் இருக்கு.

சில விஷயங்கள் இந்த உணர்வுகளை தூண்டிவிடுகின்றன. என் அண்ணன் பூனையை பார்த்தால் உடனே அதை விரட்டுவார், வீட்டுக்குள்ளேயே அது வர கூடாது என்பார். என் பால்ய நண்பர்கள் சிலர் நாயை பார்த்தால் உடனே கல்லெடுத்து அதை அடிப்பார்கள். சிலருக்கு சில பெயர்களை சொன்னாலே கோபம் பொத்துக்கொண்டு வரும்!

இப்படி அவரவருக்கு சில விஷயங்கள் இருக்கும். இதெல்லாம் வாசனைகளை சார்ந்தவை. முன் ஜன்மத்தில சில காரணங்களால் சிலது பிடிக்கும் பிடிக்காது; அது அத்தனையும் இப்ப இனம் புரியாம, ஏன்னு தெரியாம வெளிப்பட்டுகொண்டு இருக்கு!

No comments:

Post a Comment