நாம
சாதாரணமா எதானாலும் உடனடியாக
உணர்ச்சி பூர்வமாக
எதிர்வினையாற்றுவோம்,
இல்லையா?
அது இயல்புதான்.
ஆனா இந்த
உணர்ச்சி நம்மை கடத்திக்கொண்டு
போய் விடுமா, அல்லது
நாம் சமாளித்துக்கொண்டு
புத்தி பூர்வமாக செயலாற்றுவோமா
என்கறதுதான் முக்கியம்.
அப்படி
சமாளிக்க முடியாம எது நம்மை
தொடர்ந்து உணர்வுகளிலேயே
இருக்க வைக்குமோ அது நமது
பலகீனம்; தூண்டு
விசை ன்னு தெரிஞ்சுக்கணும்.
உணர்வு சார்
நுண்ணறிவு எதை குறிக்குது?
நம்/
மற்றவர்கள்
உணர்வுகளை புரிந்து கொள்வதையும்
அவற்றை மேலாளுவதையும்
குறிக்குது. இதுதான்
நாம் யாரிடம் எப்போ எங்கே
எப்படி நடந்துக்கிறோம் என்கிற
விதத்தை நிர்ணயிக்கிறது;
முடிவுகள்
எடுப்பதையும் வெற்றி தோல்விகளை
அடைவதையும் பாதிக்கிறது.
அறிவு
இதில (நேரடியாக)
சம்பந்தப்படவில்லை.
மிகவும்
புத்திசாலியாக இருப்பவர்
இதில் திறமையுடன் இருப்பார்ன்னு
இல்லை. இது
வேற சமாசாரம். அதிக
புத்தி இல்லாதவர் இதில்
திறமைசாலியாகவும் இருக்கலாம்.
கற்கும்
திறன் பிறவியில் ஏறக்குறைய
நிர்ணயிக்கப்பட்டு விடும்.
இதை முழுக்க
நாம் பயன்படுத்திக்கொள்கிறோமோ
இல்லையோ என்பது சூழ்நிலையில்
இருக்கு. சூழ்நிலை
நல்லா அமைஞ்சு நல்ல பள்ளி கிடைச்சு வீட்டு/ நிதி
ஆதரவும் இருந்தா நல்லா படிச்சு
பெரிய பட்டம் வாங்குவார்.
இதுல குறைவிருந்தா
படிப்பு பாதிக்கப்படும்.
கற்கும்
திறன் மூளையில் அடிபடுவதாலோ
அல்லது நோயாலோ குறையலாம்.
மற்றபடி அது
அப்படியேத்தான் இருக்கு.
ஆனால்
உ.சா.நு
(இனிமேல்
இதை ஆங்கிலத்தில் ஈக்யூ என்றே
சொல்வோம்; அதுவே
சுலபமாக இருக்கும்!)
அப்படி இல்லை.
அதை வெகுவாக
மாற்ற முடியும். பிறவியில்
சிலர் இதில் விற்பன்னர்களாக
இருக்கலாம். பலரும்
அப்படி இருக்க மாட்டார்கள்.
இருந்தாலும்
இது குறைவாக இருந்தால் அதை
மேம்படுத்த முடியாதுன்னு
இல்லை.
No comments:
Post a Comment