Tuesday 1 November 2016

நான்கு திறன்கள்


அடிப்படையில் நாம் 4 விஷயங்களை கவனிக்க வேண்டும். இதுல ரெண்டு ஒவ்வொத்தருக்கும் சொந்தமானது, இன்னும் ரெண்டு சமூகத்தை சார்ந்தது. ரெண்டு விழிப்புணர்வு. ரெண்டு மேலாண்மை.
இல்லையில்லை. மொத்தம் எட்டு இல்லை. நாலுதான்.

சுய விழிப்புணர்வு, சுய மேலாண்மை. சமூக விழிப்புணர்வு, சமூக உறவு மேலாண்மை, நாலுதானே? ரைட்!

சமூகம் பத்தி சொல்கிறது நாம எப்படி சமூகத்தைப்பத்தி தெரிஞ்சு வெச்சிருக்கோம், அதோட உறவாடறோம் என்கிறதை குறிக்குது.

சுய விழிப்புணர்வு? நாம எந்த நேரத்தில எந்த உணர்வுகளோட இருக்கோம் என்கிறதை அறிஞ்சு இருப்பது. குறிப்பிட்ட நேரங்களில் எப்படி நடந்துப்போம் என்பதையும் அறிஞ்சு இருப்பது. ஒருத்தர் நம்மை பாராட்டினா அப்படியே நம்பி குளிர்ந்து போயிடுவோமா அல்லது இவன் எதுக்குடா நம்மை பாராட்டரார்ன்னு சந்தேகப்படுவோமா? ஒத்தர் நம்மை திட்டினா என்ன செய்வோம்? இது போல… புரியுதில்லையா?

உண்மையா நாம நம் உணர்வுகளை புரிஞ்சுக்கணும்ன்னா அதுக்குன்னு தனியா நேரம் ஒதுக்கி உட்கார்ந்து அதைப்பத்தி யோசிக்கணும். உணர்வுகளுக்கும் ஒரு வேலை இருக்கு. அது பாட்டுக்கு சும்மா வரதில்லை. இந்த உணர்வுகள் ஏன் எங்கிருந்து வரதுன்னு பார்க்கணும். பல சமயம் அது சரியா பிடிபடாது.

குறிப்பிட்ட விஷயத்துல எனக்கு நிறைய தெரியும்ன்னு நினைச்சுக்கிட்டு வெளியே காட்டிகிட்டு இருக்கேன், ஆனா உள்ளுக்குள்ள அப்படி இல்லைன்னு தெரியும். இப்ப யாரும் நான் சொல்கிறதை மறுத்து பேசினா இந்த குறைபாடு வெளிப்பட்டுடுமோன்னு பயப்படுவேன். அதனால கோபம் வரும். “உனக்கு என்ன தெரியும்? பெரிசா பேச வந்துட்டே?” ந்னு கத்துவேன். இது போல பலதும். இதை நிதானமா உட்கார்ந்து யோசிச்சாத்தான் வெளியே வரும். இப்படி நம்மோட உண்மை ரூபத்தை நேருக்கு நேர் சந்திக்கற தைரியம், நம் பலவீனங்களை, அவமானங்களை சந்திக்கிற தைரியம் அவசியமா இருக்கணும். அப்பத்தான் நாம இந்த விஷயத்துல கொஞ்சமாவது முன்னேறலாம்.
பலமான உணர்வுகளுக்கு இன்னும் அதிக நேரம் செலவழிச்சு யோசிக்க வேண்டி இருக்கலாம். ஆனா பின்னால ‘அடடா, இப்படி செஞ்சுட்டோமே’ ந்னு வருத்தப்படாம இருக்கணும்ன்னா இது அவசியமே.

இப்படி ஆழ் மனசில புதைஞ்சு இருக்கிற கருத்த ரகசியங்களை அடிமனசு உந்துதல்களை வெளிச்சம் போட்டுக்காட்டறது இதோட நோக்கமில்லை. ஆனா அதை புரிஞ்சுகிட்டா, ரைட் இதை சரி செய்ய இப்படி செய்யணும் என்கிறது சுலபமா புரிஞ்சுடும். எதை நாம் நல்லா செய்யறோம், எது நம்மை செயல்பட உந்துது; எதை செஞ்சா நமக்கு நிறைவை தருது; யார் அல்லது எந்த சூழ்நிலை நம்மை உணர்ச்சிகுள்ளாக்குது என்பதை எல்லாம் புரிஞ்சு கொண்டால் தெளிவா இருக்கலாம்.  

No comments:

Post a Comment