இந்த
சுய விழிப்புணர்வுல ஆச்சரியம்
என்னன்னா இதைப்பத்தி கொஞ்சம்
கவனம் இருந்தாலே, யோசிச்சாலே
போதும், நாம
இதுல முன்னேறுவோம்.
ஆரம்பத்துல
நாம் நம்மோட குறைகளைப்பத்தியே
அதிகம் கவனம் செலுத்துவோமா
இருக்கும். ஆனாலும்
பின்னால நாம இதைப்பத்தி
பயப்படாம இருப்போம்.
இது என்ன
சொல்லுது? நாம
எதை சரி செஞ்சுக்கணும்ன்னுதானே?
ரைட்,
செஞ்சுடுவோம்.
இப்படித்தான்
நினைக்கத்தோணும்.
நாம
வளர்த்துக்க வேண்டிய இந்த
நாலு திறமைகளில இதுவே ரொம்ப
முக்கியம். இது
இருந்துட்டா மற்றதை எல்லாம்
நல்லாவே சுலபமாவே பயன்படுத்த
முடியும். இது
அதிகமாக ஆக நாம் நம் வாழ்க்கையைப்பத்தி
சந்தோஷப்படுவோம். நம்மால
சுலபமா நாம நினைச்சதை -
வீட்டிலேயோ
வேலையிலேயோ - சாதிக்க
முடியறதே!
ஆராய்ச்சிகள்
சொல்வது, இதில
அதிக திறனோட இருக்கறவங்களில
83 % பேர்
நல்லா வேலை செய்கிறவங்களில
மேல் மட்டத்தில இருக்காங்க.
2% மட்டுமே
கீழ்மட்டத்தில இருக்காங்களாம்.
நம் மனசை
ஆராயறதுன்னாலே தயங்கறோம்.
பயப்படறோம்.
அது மன நோய்ன்னு
நினைக்கிறோம். எதாவது
ஆபத்தை எதிர் நோக்கறப்பத்தான்
நம்மோட பலம் பலகீனங்களை
புரிஞ்சுக்கணுமா என்ன?
சாதாரணமா
இருக்கறப்பவே மனசை ஆராய்ஞ்சு
அதோட கோரமான முகம் புன்னகைக்கும்
முகம்ன்னு எல்லாத்தையும்
தெரிஞ்சுக்கலாம். ஆனா
அப்படி நாம செய்யறதில்லை.
எது சௌகரியமா
இருக்கோ அதை மட்டும் ஏத்துக்கொண்டு
அசௌகரியமானதை கண்டுக்காம
விட்டா நம்மால நம் முழுத்திறனோட
செயல்பட முடியாது. அழகான
கன்னத்துக்குழிகளையும்
பருக்களையும் சேர்த்தே
பார்க்கலாம்!
No comments:
Post a Comment