உங்க
உணர்ச்சிகளின் பாங்கையும்
போக்கையும் புரிஞ்சுக்க
கஷ்டமா இருந்தா என்ன செய்யறது?
சரி.
உங்களுக்கு
எந்த திரைப்படங்கள் பிடிச்சது?
ரசிச்சு
வாசிக்கற புத்தகம் எது?
அடிக்கடி
கேட்கிற முணுமுணுக்கிற பாட்டு
எது? இதையெல்லாம்
கொஞ்சம் ஆராயுங்க! அந்த
பாட்டின் வரிகள் என்ன சொல்லுது?
இல்லை ட்யூன்
சோகமா இருக்கா? கதையில்
பிடிச்ச பாத்திரம் யாரு?
இவர்களோட
உணர்ச்சிகள் உங்களோட உணர்ச்சிகளோட
ஒத்துப்போகிறதா இருக்கலாம்.
அதனாலத்தான்
அதெல்லாம் பிடிச்சு இருக்கு!
அந்த கதா
பாத்திரம் எப்படி நடந்துக்கறார்?
அவரைச்சுற்றி
இருக்கும் பாத்திரங்களோட
செயல்கள் என்ன? இதை
ஆராயலாம். இதை
சொல்லுவதன் மூலம் உங்களைப்பத்தி
பிறருக்கும் தெரிய வைக்கலாம்.
சில சமயம்
நாம உணர்கிறதை வார்த்தைகளில
சொல்ல வராது. அதை
நேரடியா பார்க்கிறப்பத்தான்
சரியாகும். அடுத்த
முறை இந்த ஊடகம் எதையும்
பார்க்கிறப்ப இதை நினைவில
வைச்சுக்கலாம்.
பெண்கள்
மாஞ்சு மாஞ்சு டிவி சீரியல்
ஏன் பார்க்கிறாங்கண்ணு இப்ப
தெரியுதா? அதில
இருக்கிற அபாயமும் புரியுதா?
No comments:
Post a Comment