Tuesday 22 November 2016

’மூட்’ ஒரு பிரச்சினை!

எல்லாருக்குமே மோசமான மூட் வரத்தான் செய்யும். அப்படி இல்லாதவங்களை பார்த்தா சொல்லுங்க. ஒரு நமஸ்காரம் பண்ணிக்கணும். ஏன்னா அவர் பெரிய மகானா இருப்பார்!
சாதாரண ஆட்களுக்கு சில சமயம் காலை எழுந்தது முதலே ஒரு மார்க்கமாத்தான் இருக்கும். எதுவுமே சரியா நடக்காது. வழக்கமா ஒழுங்கா நடக்கற சமாசாரங்கள் இன்னைக்கு இடக்கு பண்ணும். இதுல என்ன பிரச்சினைன்னா எல்லாமே கெட்டது, சரியில்லைன்னு தோணிடும். அதனால ஒண்ணு ரெண்டு நல்லது நடந்தாக்கூட அது மனசில பதியாது. எல்லாமே பிடிக்காம போகும். என்னடா வேலை இதுன்னு அலுப்பு வரும். வீட்டில இருக்கறவங்களோ, அலுவலகத்தில் இருக்கறவங்களோ எல்லாருமே நமக்கு எதிரா சதி செய்யறாங்களோன்னு தோணும். “ஒத்தர்ன்னா ஒத்தர் கூட …. எனக்கு ஹிதமா நடந்துக்கறதில்லைய்யா! இந்த வாழ்க்கையை வாழ்ந்து நா என்ன சாதிக்கப்போறேன்? என் எதிர்காலம் அவ்ளோதான், போச்!”

என்னதான் உள்ளுக்குள்ள புத்திக்கு நிலமை அவ்ளோ மோசமில்லைன்னு தெரிஞ்சாலும் மனசு அதை ஏத்துக்கப்போகுதா என்ன?

சரியான சுய உணர்வு பெற நம் நிலை நமக்கு புரியணும். பார்க்கறதெல்லாம் ஒரு ’மூட்’ புகை ஊடாத்தான் தெரியுது; உண்மையில்லை.

என்ன செய்யறது?
மூட் என்கிறது மாறக்கூடியது. அதாவது அதை பெருக்கிக்காம இருந்தா. முடிஞ்சா பேசாம படுத்து ஒரு தூக்கம் போடுங்க. அப்படி வாய்ப்பில்லைன்னா பரவாயில்லை. கொஞ்சமாவது எச்சரிக்கையா இருங்க. முக்கியமாக முடிவுகளை எடுக்க வேணாம். முக்கியமா இந்த மோசமான மூட் ஐ எதுவும் தூண்டி இருக்குனு கண்டு பிடிக்க முடிஞ்சா அதை மனசில போட்டு உருட்ட வேணாம். கொஞ்சம் பொறுமையா இருங்க. இதுவும் கடந்து போம்!


No comments:

Post a Comment