உணர்ச்சிகள்
எப்பப்போ வருது, என்ன
விளைவுகள்ன்னு ஒரு டைரி
எழுதுங்க. யார்
எப்போ நம்மை திட்டினாங்க,
கோபப்பட்டோமா,
அழுதோமா,
வேற ஏதாவது
செய்தோமா? இப்படி
ஒரு பதிவேடு இருக்கறது நம்மோட
உணர்ச்சிகளை ஆராய நிச்சயம்
உதவும்.
தினசரி
ஆயிரம் ஆயிரம் உணர்ச்சிகள்
வருது. நாளொண்ணுக்கு
சுமார் ஐம்பதாயிரம் எண்ணங்கள்
சராசரியா ஒத்தருக்கு வரதா
கணக்கிட்டு இருக்காங்க.
பெரும்பாலான
எண்ணங்கள் உணர்ச்சியையும்
சார்ந்து இருக்குமில்லையா?
அதனால் இவ்வளோ
உணர்ச்சி குவியல்ல என்ன
வந்ததுன்னு நினைவு வெச்சுக்கறது
கஷ்டமாவே இருக்கும்.
அப்புறம்
எப்படி இதை விலகி நின்னு
பார்க்கிறது?
ஒரு
மாசம் கழிச்சு இதை திருப்பி
படிச்சுப்பாத்தா அப்ப எந்த
உணர்ச்சிகள் நம்மை பாதிக்குது
எது பாதிக்கலைன்னு புரியும்.
எது நம்மை
உற்சாகப்படுத்துது,
எது அதல
பாதாலத்துல போட்டு அமுக்குதுன்னும்
புரியும். போன
பதிவில பார்த்தபடி யார் நம்மை
எரிச்சலூட்டறங்க (அல்லது
எது) ந்னும்
புரியும். கூடுதலா
நம்மோட இயல்பான போக்கு எப்படி
இருக்கு, எதை
சரி செஞ்சுக்கணும்ன்னும்
புரியும்.
No comments:
Post a Comment