யார்/
எது உங்களை
எரிச்சலடைய வைக்கிறது?
ம்ம்ம்
… உண்மையில் எரிச்சல்ன்னு
இல்லை. உணர்ச்சிகளை
தூண்டறதுன்னு சொல்லி இருக்கலாம்.
ஆனா இது
கொஞ்சம் சுலபமா புரியும்ன்னு
நினைச்சேன்!
சிலர்
ஒரு ரூமில இருந்தா அங்கே
அவங்கதான் ஆளுமை செலுத்தறா
மாதிரி நடந்துப்பாங்க!
அவங்கதான்
சத்தம் போட்டு அதிகமா பேசுவாங்க.
யார் எதை
சொல்லப்போனாலும் அதுக்கு
தானா பதில் சொல்வாங்க/
விமரிசனம்
செய்வாங்க. கிடக்கட்டும்.
ஒரு
வேளை நீங்க அறையில் இருக்கிற
மக்களோட கவனத்தை ஈர்க்க
நினைச்சா, அப்படி
செய்ய வேண்டி இருந்தா இந்த
நபரை வெறுப்பீங்க! சீரியஸா
ஒரு ஸ்டாஃப் மீட்டிங் நடத்தப்போனா
இவங்க அங்கே ஆளுமை செலுத்த
ஆரம்பிச்சா எப்படி இருக்கும்?
வந்துட்டான்யா!
இனிமே மீட்டிங்
உருப்படியா நடந்தாப்போலத்தான்
ந்னு நினைப்போம். எரிச்சல்,
சமயத்துல
இயலாமை, கோபம்
எது வேணா வரும்!
யார்
எப்படி நம்மை எரிச்சலடைய
வைக்கிறாங்கன்னு தெளிவா
புரிஞ்சுக்கறது இந்த சமயத்தில
நிலைகுலையாம இருக்கவும்
நம்மை ஆசுவாசப்படுத்திக்கவும்
நிலையை கட்டுக்குள்ள வைக்கவும்
உதவும். நம்மை
எரிச்சலடைய வைக்கிறது சில
நபர்களா இருக்கலாம்.
அல்லது ரொம்ப
சத்தம் இருக்கிற இடங்கள்
மாதிரி சில சூழ்நிலைகள்.
இதை புரிஞ்சுகிட்டா
- முக்கியமா
இவை திடீர்ன்னு ஏற்படாம
எதிர்பாக்கப்படும் என்கிறதால-
கையாளுவது
சுலபம். இவற்றோட
மூலத்தை அடையாளம் காண முடிஞ்சா
இன்னும் நல்லது. அதெப்படி
நம்மை எரிச்சலடைய வைக்கிற
சிலர் செய்யறதை வேற சிலர்
செஞ்சா எரிச்சல் வரதில்லை?
அப்ப இவங்க
எரிச்சலூட்டறதுக்கு வேற எதோ
காரணமிருக்கும். என்னது?
எப்பவும்
இதே மாதிரி நடந்து கொண்டு
எரிச்சலூட்டின உங்க க்ளாஸ்
மேட்டை நினைவு படுத்தறாங்களா?
அந்த க்ளாஸ்மேட்
மேல இருந்த வெறுப்பு இவங்க
மேல பாயுமே!
இருக்கட்டும்.
இப்போதைக்கு
எதெல்லாம் எரிச்சலூட்டுதுன்னு
ஒரு பட்டியல் போடுங்க.
பின்னால
மேலாண்மை பத்தி படிக்கறப்ப
இவற்றை கையாளறது எப்படின்னு
பார்க்கலாம்.
No comments:
Post a Comment