எளிதா
சொல்ல இது நாம் உண்மையில
எப்படிப்பட்டவர்ன்னு நாமே
உணர்வது. இது
கொஞ்சம் புகைபடர்ந்த விஷயம்.
கொஞ்ச நாள்
கழிச்சு யாரும் வந்து உனக்கு
முழுக்க சுய உணர்வு வந்துடுத்து;
பாராட்டுக்கள்
ந்னு சொல்லப்போறதில்லை!
நாமேதான்
நம் முன்னேற்றத்தை கணிக்கணும்;
அது தப்பா
இருந்தா வேற யாரும் வந்து
சரிசெய்ய முடியாது! நாம
போட்டுகிட்டு இருக்கற முகமூடிகளை
எல்லாம் நிர்தாட்சண்யமா
கழட்டி பாக்கணும்.
வெங்காயத்தை
உரிக்கறா மாதிரி உரிய உரிய
மேலும் மேலும் நம்மோட சுய
ரூபம் தெரியவரும்! எவ்வளோ
தூரம்தான் உள்ளே போக முடியுதுன்னு
பார்த்துடுவோமே!
உணர்ச்சிகள்
இல்லாத ஆசாமி மிகவே அரிது
என்கிறதால நம்மோட உணர்ச்சிகளை
- நல்லது,
கெட்டது
இரண்டுமே- சரியா
புரிஞ்சுக்கணும்.
இந்த
உணர்ச்சிகளில எதுவுமே தப்பில்லை.
கெட்டது
நல்லதுன்னு எதுவும் இங்க
இல்லே. அவை
அத்தனையும் நமக்கு எதையோ
சொல்ல வருது. அதை
சரியா புரிஞ்சுக்கற வரை அது
திருப்பித்திருப்பி
வந்துகிட்டுத்தான் இருக்கும்.
திருப்பித்திருப்பி
கோபம் வர விஷயத்தை கவனிச்சுப்பாத்தா
கடைசில நாம் பயப்படும்
சமாசாரத்தை அது காட்டும்.
சைக்கிள்
விட பழகற குழந்தைய ஏன் கோபித்து
திட்டிக்கொண்டே இருக்கே?
அது எங்கான
வெளியே போய் ரோடில ஆக்ஸிடெண்ட்
ஆயிடுமோன்னு பயம்; அதான்!
இப்படி பலது!
இதை கவனிச்சு
‘அட! இதுக்கு
பயந்தா பையன் சைக்கிள் ஓட்ட
கத்துகவே மாட்டான். என்ன
செய்யலாம்ன்னு யோசிப்போம்!’
ந்னு யோசிச்சு
பாத்தா இந்த கோபம் (இது
மட்டும்!) நின்னுடும்.
ஆனா
இப்படி யோசிச்சு உள்ளே இருக்கற
உணர்ச்சியை சரியா புரிஞ்சுக்க
கொஞ்சம் தைரியம் வேணும்.
உண்மை சில
சமபம் கசக்கலாம். அதுக்கு
தயங்கினா நாம முன்னேற முடியாது!
கசப்பான
உண்மைகளை நொண்டி சாக்கு சொல்லி
ஜஸ்டிஃபை செய்ய மனசு முயற்சிக்கும்!
இடம்
கொடுக்கக்கூடாது.
No comments:
Post a Comment