நல்ல
உணர்ச்சி கெட்ட உணர்ச்சின்னு
ஒண்ணுமே இல்லை! இரண்டுமே
எனர்ஜிதான். அதோட
விளைவை பாத்து நல்லது கெட்டதுன்னு
நாம பாகம் செய்யறோம்.
அது எல்லாருக்கும்
எப்பவும் அப்படி இருக்கும்ன்னு
ஒண்ணுமில்லை.
உதாரணமா
குற்ற உணர்ச்சி. பெரும்பாலும்
இதை கெட்டதுன்னுதான் நினைப்பாங்க.
யோசிச்சு
பாத்தா விரும்பத்தகாத ஒரு
செயலை செய்யாதேன்னு இது
சொல்லுது! அதே
போல ‘நல்ல’ உணர்ச்சிகளையும்
தலை தெறிக்க ஓட விடறோம்.
இதுவும்
உடம்புக்கு நல்லதில்லை.
இந்த ‘நல்லது’
கெட்டது; என்கிறதை
பிரிச்சுப்பாக்கிறதை நிறுத்தினா
அவை தானே ஓடி செய்ய வேண்டியதை
செஞ்சு, உணர்த்த
வேண்டியதை உணர்த்தி காணாமப்போகும்!
பிரிச்சுப்பாக்கிறதுல
என்ன பிரச்சினைன்னா அது சொல்ல
வந்த விஷயம் நமக்கு புரியாம
போகும். அதனால
அது திருப்பித்திருப்பி
வந்து கொண்டு இருக்கும்.
அதை உணர்ந்து
‘சரி, வா!
உக்காந்து
பேசலாம். என்னதான்
சொல்ல வரே?” ந்னு
விசாரிக்க அது சொல்ல வந்ததை
சொல்லிட்டு காணாமப்போகும்.
மாறா தப்பு
ரைட்டுன்னு பார்க்க ஆரம்பிச்சா
அது இன்னொரு குற்றவுணர்ச்சியை
கொண்டு வந்து குழப்பிடும்.
முதல் வந்த
உணர்வு சொல்ல வந்தது
அடிபட்டுப்போயிடும்.
அதனால
அடுத்த முறை உணர்ச்சி ஏதும்
மேலெழும் போது நல்லது கெட்டதுன்னு
பார்க்காம அதை என்ன சமாசாரம்ன்னு
விசாரிங்க!
No comments:
Post a Comment