Friday 4 November 2016

சுய ஆளுமை

அடுத்ததா சுய ஆளுமை.
ஒரு நேரத்தில தான் விழிப்புடன், செயல்படுவதோ செயல்படாமல் இருப்பதோதான் சுய ஆளுமை. அதாவது மனசு தூண்டற மாதிரி இல்லாம புத்தி பூர்வமா செயல்படறது. நாம கோபப்பட்டா நாம் கோபமா இருக்கோம்ன்னு தெரியணும்; சோகமா இருந்தா சோகமா இருக்கோம்ன்னு. அதாவது நம்மோட விழிப்புணர்வு இருக்கறது அவசியம். இப்ப என்ன செய்யணும்ன்னு புத்திய செலுத்தி யோசிக்கணும்; அதாவது அப்ப ஏதேனும் செய்ய வேண்டி இருந்தா. சில சமயம் ஒண்ணும் செய்ய தேவையும் இருக்காது இல்லையா? என்ன செய்யலாம் என்கிறதுல சில தேர்வுகள் -ஆப்ஷன்ஸ்- இருக்கும். அதையும் யோசிக்கணும். அப்புறமா செயல்படணும். அதாவது மற்றவர்கள் ஏற்படுத்தும் சூழ்நிலையால் உணர்ச்சி பூர்வமான எதிர்வினையா இல்லாம யோசிச்சு எதையும் செய்யணும்.
சில அதீத உணர்ச்சிகள் நமக்கு தேர்வு எதுவுமே இல்லையோன்னு நினைக்க வைக்கலாம். நல்லதும் நடக்கலாம்; கெட்டதும் நடக்கலாம். முடிவு இப்படித்தான் இருக்கணும் என்கிறது நம்ம கையில இல்லையே? அதத்தானே பகவத் கீதை சொல்லுது? ஆனாலும் நிச்சயமில்லாத தன்மையை பொறுத்துக்கொண்டு உணர்ச்சிகளை கவனிச்சு புரிஞ்சுக்கொள்ள பழகியாச்சுன்னா ஏதோ வழி நிச்சயமா தென்படும்.
சுய ஆளுமை வெறுமே கோபத்தை அடக்கவோ பிரச்சினையான நடத்தையை மாத்தவோ மட்டுமில்லே. இதுல பெரிய விஷயம் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களிலேயும் இதை கடைபிடிச்சு நடந்துக்கறதுலதான் இருக்கு. சிறுதுளி பெரும் வெள்ளம் இல்லையா?
சர்க்கரை வியாதி இருக்கற ஆசாமி ஆரம்பத்திலிருந்தே “அட இது நல்லா இருக்கும் போலிருக்கே? சாப்பிடலாமே!” ந்னு தோணுகிற சின்ன சின்ன சபலத்தைக்கூட இந்த நிலையிலேயே கிள்ளி எறியணும். நிலமை கட்டுக்குள்ள இல்லாம போகிற வரை பொறுத்து செய்கிறதில்லை. தற்காலிக லாபத்துக்காக, சபலத்துக்காக நெடு நாள் இலக்குக்கு கேடா எதையும் செய்யக்கூடாது.

சொல்ல வரது என்னன்னா செய்கிற எல்லாத்தையுமே புத்தி பூர்வமா செய்கிறதா பழக்கம் கொண்டு வரணும். இது சின்ன விஷயம்தானே, மனசுல படறதை செய்யலாம்ன்னு எதையுமே நினைக்கக்கூடாது.

No comments:

Post a Comment