Monday 14 November 2016

தொத்திக்கொள்ளும் உணர்வுகள்

சின்ன வயசுல குளத்தில கல்லு விட்டு எறிஞ்சிருப்போமே? என்னது இல்லையா? குளத்த பாத்ததே இல்லையா? ஹும்! சரியான நகரவாசி நீங்க! சரி சரி. குளத்தில கல்லை விட்டு எரிஞ்சா அது விழுந்த இடத்தில தண்ணியை பிரிச்சுகிட்டு விழறதுனால அலைகள் தோணும். அது அங்கிருந்து கிளம்பி வட்ட வட்டமா கரை வரைக்கும் பரவும். அது போல நம்மகிட்ட தோன்றுகிற உணர்ச்சிகள் நம்மை சுத்தி இருக்கறவங்ககிட்டேயும் பரவும். துக்க சமாசார வீட்டுக்கு போனா…. போறப்ப நல்லாத்தானே இருப்போம்? ஆனா அங்க கதறி அழற பொண்ணையோ பிள்ளையையோ பாத்தா நமக்கும் துக்கம் தொத்திக்கும். இது எது வரை போகும் என்கிறது வெவ்வேறயா இருக்கலாம். ஆனால் துக்கம் நம்மை தாக்கறது நிஜம். பிறந்த நாள் கொண்டாடற குழந்தையோட உற்சாகம் நம்மையும் சந்தோஷப்பட வைக்குது. பலர் முன்னே மேனேஜர் ஒத்தரை கூப்பிட்டு திட்டு திட்டுன்னு திட்டினா அது அவரோட மட்டும் நிக்கறதில்லை. எல்லாருமே கொஞ்சமாவது பாதிக்கப்படுவாங்க. ஒரு வேளை மேனேஜர் “குட்! எல்லாருமோ கப்சிப்ன்னு ஆயிட்டாங்க. வேலை ஒழுங்கா நடக்கும்!” ந்னு நினைச்சா…. அது அப்படி நடக்கும்ன்னு இல்லே. மாறா எல்லாருமோ இன்னும் கொஞ்சம் ஜாக்ரதையா, முடிவெடுக்காம வேலைகளை தள்ளிப்போட சான்ஸ் இருக்கு. ஒரு வருஷம் கழிச்சு வேலை செய்ய முனைப்பில்லாத டீமை வெச்சுண்டு இருக்கேன்னு இவருக்கே கூட கல்தா கிடைக்கலாம். இவர் டீமை திட்டிண்டு இருப்பார்!

நம்மோட உணர்ச்சிகளும் சக்தி வாய்ந்தவை. அதெல்லாம் அந்த நேரத்துக்கு நமக்கு மட்டுமே பாதிக்கும்ன்னு நினைக்கறது முட்டாள்தனம். இதனால நம்மோட உணர்ச்சிகளை கட்டுக்குள் ஏன் வைக்கணும்ன்னா அதோட தாக்கம் கூட இருக்கறவங்க மேல உடனடியா எப்படி இருக்குன்னு பாருங்க! அப்ப இது எவ்வளோ தூரம் பரவலாம்; எவ்வளவு காலம் இதோட விளைவு இருக்கும்ன்னு புரிஞ்சு நம்மோட உணர்ச்சிகளை மாற்ற உதவலாம்.

No comments:

Post a Comment