Monday 7 November 2016

சமூக விழிப்புணர்வு:

இதுவே சமூக திறனுடைய அடிப்படை. நம்மை ஆராய்ந்து நாம் ஏன் எப்படி உணர்ச்சி வசப்படுகிறோம்ன்னு பார்க்கிறோம் இல்லையா? அதே போல மற்றவர்களைப்பற்றியும் உணர முடிவது சமூக விழிப்புணர்வு. மற்றவர்கள் எந்த உணர்ச்சிகளோட இருக்காங்க? ஏன் அப்படி? இதை சரியா புரிஞ்சுகிட்டா பல விஷயங்கள் முடிஞ்சுடும். ஆனா அது சுலபமில்லை என்கிறது வெளிப்படை!

ஒரு சமயத்தில் நாம் ஒரு மாதிரி உணர்வோம். மத்தவங்க அதே மாதிரி உணரணும்ன்னு ஒண்ணும் கிடையாது. முந்திரி கேக்கை பாத்தா எனக்கு ஜொள்ளு ஊறும். மத்தவங்களுக்கும் அப்படியே இருக்கும்ன்னு சொல்ல முடியுமா என்ன?

நம்மோட உணர்ச்சிகளை கொஞ்சம் ஒதுக்கி வெச்சுட்டு மத்தவங்களை அவங்க இடத்தில இருந்து பார்க்க முடியணும். கூர்ந்து கவனிக்கறதும் காது கொடுத்து கேட்கிறதும் இதுக்கு உதவும். இதுக்கு நம்மோட செயல்களை கொஞ்சம் நிறுத்தணும், நாம் பாட்டுக்கு அடுத்து என்ன செய்வோம், என்ன பேசுவோம், மற்றவர் என்ன சொல்லப்போகிறார், என்ன செய்யப்போகிறார் என்பதைப்பத்தி ஊகம் செய்துகிட்டு இருந்தா அது இதுக்கு முட்டுக்கட்டையா இருக்கும். இதுக்கு நிறையவே பொறுமையும் பயிற்சியும் வேணும். ஒரு மனித இயல் ஆய்வாளர் மாதிரி கவனிக்கணும். ஒரே வித்தியாசம்; அவங்க தூரத்தில இருந்துகிட்டு கவனிப்பாங்க. இங்க நாமளோ அவங்க கூடவே இருந்துகிட்டு செயலாற்றிகிட்டு பேசிகிட்டு கவனிக்கவும் செய்யணும்!


No comments:

Post a Comment