Tuesday 15 November 2016

சங்கடத்தை அரவணையுங்க!

சங்கடத்தை அரவணையுங்க!
நாம் சுய விழிப்புணர்வை வளர்க்க தடையா இருக்கக்கூடியது ஒண்ணு இருக்கு. அதான் நாம் எப்படி இருக்கோம்ன்னு நிஜமா பார்க்கறதில இருக்கிற சங்கடம்! சங்கடமா இருக்கறது நம்ம கண்ணுல படாதே! ஏன்னா அத நாம் விரும்ப மாட்டோம். இப்படி இருக்கறது தற்காலிக தீர்வுதான். அது எப்பவோ நிஜமா வெளிப்படும் போது நமக்கு பெரிய வலியா இருக்கும்.

என் அண்ணாவோட பொண்ணு ஸ்கூல்ல படிச்சுகிட்டு இருந்தப்ப ஸ்கூல்லேந்து வந்த உடனேயே ஹோம் வொர்க்கை எடுத்து வெச்சுண்டு பரபரன்னு முடிச்சுடுவா! அப்புறம் நிம்மதியா விளையாடப்போகலாமே!
அதே போல சங்கடமா இருந்தாலும் சுய ஆராய்ச்சியில நம் சுய ரூபத்தை வெளிப்படுத்தி எதிர்கொள்வதே நல்லது. உணர்ச்சியை பக்கவாட்டில தவிர்த்துக்கொண்டு போகாம நேரடியாவே போய், அதை சந்திச்சு, பிறகு அதன் ஊடே போவதே நல்லது. இந்த சங்கடங்கள் சின்னதா இருந்தாக்கக்கூட இதுவே நல்லது. அது போர் அடிக்கறதா இருக்கலாம்; குழப்பமா இருக்கலாம். ஒரு எதிர்பார்ப்பா இருக்கலாம்.

வாழ்க்கையில் நாம் நம்மோட திமிரை பார்க்கணும். சிலதை கத்துக்க முயலாம முக்கியமில்லைன்னு விலக்கறோம் இல்லையா? உதாரணமா நாம எதாவது தப்பா செஞ்சுட்டா மன்னிப்பு கேட்கறது. மன்னிப்பு கேட்கறது கீழ்மைன்னு நினைக்கிற நபருக்கு மன்னிப்பு கேக்கணும்ன்னு எப்பவுமே தோணாது.
உற்சாகம் குறைவா டல்லா இருக்கவே கூடாதுன்னு சிலர் நினைப்பாங்க. அவங்க சும்மா இருக்க முடியாம அர்த்தமே இல்லாம எதையாவது செஞ்சுகிட்டே இருப்பாங்க.
இந்த ரெண்டு வகையினருமே அவரவர் உணர்ச்சிகளை அரவணைக்க கத்துக்கணும். அப்பத்தான் அதைப்பத்தி யோசிச்சு ஏதாவது செய்ய முடியும். இல்லைன்னா பழையபடி செக்கு மாடா செஞ்சதையே செஞ்சுகிட்டு இருக்க வேண்டியதுதான்.


இப்படி முதல்ல அரவணைக்கறப்ப கொஞ்சம் சங்கடமாத்தான் இருக்கும். சில முறை செஞ்சுட்டா அப்பறமா ‘ஓ இந்த சங்கடம் அப்படி ஒண்ணும் தாள முடியாதது இல்லை’ ன்னு தோணிடும். பலனை சீக்கிரமே பார்க்கலாம். ஆச்சரியமா சுய விழிப்புணர்வைப் பத்தி யோசிக்கறதே அதை பெருக்கிக்க உதவும். நமக்கு சுய விழிப்புணர்வு வேணும்ன்னு தெரியறதே ஒரு பெரிய விழிப்புணர்வு இல்லையா? :-) ஆரம்பத்தில எதையெல்லாம் தப்பா செய்யறோம் என்கிறதுலதான் நம் கவனம் இருக்கும். பரவாயில்லை. நாம் செய்யற தப்புகளைப்பத்தி கழிவிரக்கம் தேவையில்லை. முன்னேயே சொன்னது போல அதெல்லாம் நமக்கு எதையோ சொல்ல வருதுங்க. வாழ்க்கையை சரியா புரிஞ்சுக்க இவை அவசியம்.

No comments:

Post a Comment