இந்த மோசமான மூடாவது பரவாயில்லை. கொஞ்சம் எச்சரிக்கையா இருந்துடலாம். இந்த நல்ல மூட் இன்னும் மோசம்!
காலை எழுந்ததிலேந்து ரொம்ப உற்சாகமா இருக்கேன். எல்லாம் சரியா நடக்குது. உண்மையில நினைச்சதை விட நல்லா நடக்குது! இன்னைக்கு நா எந்த தப்புமே செய்ய முடியாது! இப்படி தோணினா அதுவும் கொஞ்சம் பிரச்சினைதான்! ஆராயாம எதையாவது செஞ்சு வைப்போம். ரிசல்ட் அப்புறம்தானே தெரியப்போகுது?
உதாரணமா நாம வழக்கமா பொருட்கள் வாங்கப்போகிற கடையில் தீபாவளி சேல் ந்னு விளம்பரம் போட்டு இருக்கான். 50% முதல் 75% வரை தள்ளுபடி…. அடடா ந்னு உடனே போய் வேண்டியது வேண்டாததுன்னு நிறைய வாங்கித்தள்ளிடுவோம். வாங்கலாமான்னு சபலப்பட்டது இந்த விலைக்கு கிடைக்குதா? அது அடிக்கடி பயன்படற சமாசாரம் இல்லைன்னு தெரிஞ்சாலும் அந்த எண்ணம் பின்னுக்கு தள்ளப்படும்! அப்புறமா பில் வரப்பத்தானே தெரியும்! க்ரெடிட் கார்ட்ன்னா நிலை இன்னும் மோசம்! அதனால ஒரு ‘ஜோர்’ ல எடுக்கற முடிவுகளைப்பத்தி எச்சரிக்கையா இருப்போம்!
No comments:
Post a Comment