உணர்ச்சிகள்
வருவது தானா வருது. வா
வான்னு அழைப்பு வெச்சா வருமா
என்ன? அதாவது
நீங்க ஒரு தேர்ந்த நடிகரா
இல்லாத பட்சத்தில!
ரைட்!
அது வரப்ப
நீ ஏன் வந்தேன்னு கேட்டுப்பாருங்க!
கொஞ்சம்
கஷ்டம்தான்; இருந்தாலும்
முயற்சி செஞ்சா வந்துடும்.
திடுதிப்புன்னு
மேலெழுந்த உணர்ச்சிகள்;
நாம இயல்பா
இல்லாம செஞ்ச காரியங்கள்….
ஏன் செஞ்சோம்?
எது தூண்டினது?
இதை விசாரிக்க
நமது சுய விழிப்புணர்வு
நல்லாவே வளரும். இந்த
கேள்வியை கேட்காம புரியாத
விஷயங்களுக்கு இந்த உணர்ச்சிகள்தான்
ஒரு க்ளூ கொடுக்குது!
இதே போல எப்ப
உணர்ந்தோம்? என்ன
சூழ்நிலையில? யார்
முன்னால? இது
சிலரோடத்தானா எப்பவுமா?
கேள்வியை
முனைஞ்சு கேட்க கொஞ்சம் நேரம்
செலவிடறதுதான் வேலையே.
விடை நிச்சயமா
தெரிஞ்சுடும். அது
தெரிஞ்சா அதுக்கு என்ன செய்யணும்
ன்னும் சுலபமாவே தெரிஞ்சுடும்.
No comments:
Post a Comment