Monday 1 February 2016

’சாரி’! - 2

இரண்டாவது படி நம்மோட தப்பையும் அதனால் ஏற்பட்ட பாதிப்பையும் ஒத்துக்கணும்.
உதாரணமா, தப்பு நம்முதுன்னு வெச்சுக்கலாம். ’சாரி’. ஆபீஸ்ல எதிர்பாராத வேலை வந்துடுத்து. நகர முடியலை. திரும்பி வர லேட் ஆயிடுத்து. உன்னை சினிமாவுக்கு கூட்டிப்போக முடியலை. நீ அதை எவ்வளோ எதிர் பார்த்துக்கொண்டு இருந்தேன்னு எனக்குத்தெரியும். இருந்தாலும் ஆபீஸரை மீறி வெளியே வர முடியலை. ’சாரி’.
செஞ்ச தப்பை ஆமாம்; தப்பு செஞ்சுட்டேன் ந்னு ஒத்துக்கறதே இந்த காலத்துல பெரிய விஷயமா போச்சு! ஈகோ பிரச்சினை. அப்படி இருக்கறப்ப, ”ஆமா! ஆபீஸ்ன்னு ஒண்ணு இருந்தா எதிர்பாராத வேலை வரும்தான். அதை முடிக்காம வெளியே வர முடியாதுதான். நான் என்ன பண்ணட்டும்? அது என் தப்பா என்ன? இதுக்கு மூஞ்சியை தூக்கி வெச்சுக்கறியே?” இதுல நம்ம தப்பை ஒத்துக்கலை. அதுக்கு ஒரு சப்பைக்கட்டு காட்டறோம்! மேலே என்ன நடக்கும்ன்னு சொல்ல வேண்டியதில்லை!

இரண்டாவதா தப்பு நாம செய்யலை; இருந்தாலும் நாம தவிர்க்க முடியாத காரணமா இருக்கோம். அப்போ? ”’சாரி’, கீழே யாரும் இல்லைன்னு பாத்துட்டுத்தான் தண்ணியை கீழே கொட்டினேன். கரெக்டா அந்த சமயம் பாத்து நீ வெளியே வந்துட்டே! ’சாரி’!” தண்ணியை கீழே பொண்டாட்டி மேல கொட்டினது தப்புதான்; இருந்தாலும் அதை வேணும்ன்னு செய்யலை! இதுல நாம வருந்தறோம் என்கிறது பிரதிபலிக்கலைன்னா”ஆமா! நீ எப்போ கொட்டுவேன்னு காத்துண்டு இருந்து சமயம் பாத்து வெளியே வந்தேன் பாரு!” ந்னு ஆரம்பிச்சு மஹாபாரதமே நடக்கும்.

மூணாவதா, நாம் பொதுவா செஞ்சோம் அது குறிப்பிட்ட நபருக்கு பிரச்சினையா போச்சு. ஒரேயடியா குரைச்சுகிட்டு இருக்கிற நாய்கள் கூட்டம் மேலே கல்லை விட்டு எறிஞ்சோம். நாய்கள் சிதறி ஓடி அப்ப அந்த பக்கம் வந்த ஸ்கூட்டர் ஒண்ணு சக்கரத்துல மாட்டிக்கப்பார்க்க அவர் நிலை தடுமாறி விழுந்து….

நாலாவதா வேணும்ன்னுதான் செஞ்சோம். நம்ம பையன் பொது மீட்டிங்க்ல நாம் மேடையில் உக்காந்து இருக்கிறப்ப ஏதோ தப்பாகருத்துசொல்ல நாம் உடனடியா அதை மறுக்கிறோம். பையனுக்கு மனசு வருத்தப்படுது. இருந்தாலும் நமக்கு அந்த சமயம் வேற வழியில்லை.
இப்படி பல விதமான நிகழ்வுகள் இருக்கலாம்.

பிரச்சினையே நம்மோட ஈகோ நம்மை ’சாரி’ ந்னு சொல்ல விடறதில்லை! உடனடியா நான் ஏன் ’சாரி’ சொல்லணும்? நான் பெரியவன்/ பணக்காரன்/ ரொம்ப படிச்சவன்/ நாதான் இந்த வீட்டு எஜமானன்/ எஜமானி… நான் தப்பே பண்ணலை/ அதுக்கு தகுந்த காரணம் இருக்கு. நான் ஏன் மன்னிப்பு கேக்கணும்? இப்படி ஏதோ ஒண்ணு!

இந்த ஈகோவை கழட்டி வைக்க வைக்க நாம பல விஷயங்களில் இருந்து விடுபடுவோம். பலதும் நம்மை பாதிக்காது. மகிழ்ச்சியோட இருக்கலாம்.
- தொடரும்

No comments:

Post a Comment