மூணாவது
படியா -
நடந்த
விஷயத்துக்கு ஏதேனும் இழைப்பீடு
செய்யணும்.
அது
நபருக்கு ஏற்றமாதிரி இருக்கும்.
ஒரு
குழந்தைக்கு ஒரு கட்டிப்பிடி
வைத்தியமா இருக்கலாம்.
ஒரு
சாக்லேட்டா இருக்கலாம்.
மனைவிக்கு
ஒரு சினிமாவா இருக்கலாம்.
அவங்க
வெகு நாட்களா வேணும்ன்னு
நினைச்சு இருந்த ஒரு ஆசையை
நிறைவேத்தறதா இருக்கலாம்.
அவமானப்பட்டுட்டதா
நினைக்கறவருக்கு அதை சரி
செய்யற வாய்ப்பா இருக்கலாம்.
நாம்
தப்பு செஞ்சு இருந்தா அதை
எல்லார் மத்தியிலும் ஒப்புக்கறதா
இருக்கலாம்.
பல
சமயம் இன்னொரு தரம் அது போல
நடக்காதுன்னு ஒரு உறுதிமொழியே
போதுமானதா இருக்கலாம்.
இல்லை
என்ன செய்ய முடியும்ன்னு ஒரு
ஐடியாவே இல்லைன்னா நேரடியா
கேட்டுடலாம்.
“இதை
சரி செய்ய நான் என்ன செய்யட்டும்?”
இப்படி
ஏதேனும் செஞ்சா முக்கியமா
செய்ய வேண்டியது அதை
நிறைவேத்தறதுதான்!
பொய்யா
சொல்கிற் வாக்குறுதிகள்
எல்லாம் அடுத்த முறை
செல்லுபடியாகாது.
நீண்ட
கால உறவுக்குத்தான் நாம் இதை
செய்யறோம்ன்னு நினைவு
இருக்கட்டும்!
ஒரு
வேளை நம்மை ஏதேனும் வேற தப்பு
செய்ய கேட்கறாங்க,
நம்மால்
முடியாததை கேட்கிறாங்க,
அல்லது
பொருத்தமில்லாத அளவுகேட்கிறாங்கன்னா
உறுதி கொடுக்கக்கூடாது.
அதாவது
செய்ய முடியாததை செய்வதா
சொல்லக்கூடாது.
அதைப்பத்தி
யோசிக்கிறேன்னு சொல்லி
அப்போதைக்கு தப்பிக்கலாம்.
கொஞ்ச
நாளானா அது காணாமலேக்கூட
போயிடலாம்.
கடைசியா
செய்ய வேண்டியது சாரி சொன்ன
பிறகு பாதிக்கப்பட்டவர் என்ன
சொல்கிறார்/
செய்கிறார்ன்னு
பார்க்கணும்.
நாமதான்
சாரி சொல்லிட்டோமே,
வேலை
முடிஞ்சதுன்னு இல்லை.
வெகு
சிலர்தான் உடனே ‘பரவாயில்லைப்பா,
விடு’
ந்னு சொல்வாங்க.
அதனால
சாரி சொன்னா உடனே மத்தவரும்
ஏத்துப்பாங்க, சமாசாரம்
முடிஞ்சது ந்னு இல்லை.
பாதிக்கப்பட்டவர்
இந்த இடத்தில பலதும் செய்யலாம்.
அழுதுண்டே
போயிடலாம்.
நமக்கு
உடம்பில அடிப்பட்டா அது காயம்
ஆற நாளாகிறது இல்லையா?
அதே
போலத்தான் இதுவும்.
மனசு
சரியாக கொஞ்ச நாள் ஆகலாம்.
அல்லது
பாதிக்கப்பட்டவர் நம்மை
திட்டலாம்.
சாரி
சொன்னா ஆச்சா?
ந்னு
பொங்கலாம்.
சாரி
சொல்லி இருந்தாலும் சண்டைக்கே
வரலாம்.
இது
எல்லாமே பாதிக்கப்பட்டவர்
அவருடைய பிரச்சினையை வெளிப்படுத்தற
விதம்.
பலருக்கும்
இப்படி செய்யறதால அவரோட
உணர்ச்சிகள் வடிஞ்சு நிலமை
சரியாகிடலாம்.
சில
சமயம் அவர் சொல்கிறதுல அட!
இப்படி
ஒரு கோணம் இருக்கான்னு நமக்கே
பாடம் கிடைக்கலாம்.
இப்படி
பலது இருந்தாலும் இரண்டு
நல்லது நடக்க வாய்ப்பு இருக்கு!
முதலாவதா
அவர் சுதாரிச்சு கொண்டு “ ஓ,
நாந்தான்
தப்பு பண்ணேன்;
நாந்தான்
சாரி சொல்லணும்;
சாரி
“ ந்னு சொல்லக்கூடும்.
நான்
என் லிமிட்டை தாண்டிட்டேன்;
உனக்கு
கோபம் வந்து அடிச்சுட்டே!”.
இப்படி
உணர்ச்சியோட தாக்கம் குறைஞ்சா
மனம் புண் படறது அதிகமா ஆகாது.
இரண்டாவதா
முன்னே சொன்ன மாதிரி ”ரைட்,
விடுப்பா
“ ந்னு நம்மை மன்னிச்சுவிடலாம்.
அப்ப
நம்மோட குற்ற உணர்ச்சி
கம்மியாகும்.
அதுவும்
நல்லதே!
இவ்வளவு
நேரம் நாம் சாரி சொல்லனும்ன்னு
எழுதிகிட்டு இருந்தேன்.
இது
நாம் மத்தவங்களுக்கு என்ன
செய்யணும் என்கிறதுதான்.
ஆனா
நாம மத்தவங்க நம்மகிட்ட
மன்னிப்பு கேட்கணும் என்கிற
எண்ணத்தை வளத்துக்கக்கூடாது.
அது
சரியோ தப்போ,
மத்தவங்க
இப்படி இப்படி நடந்துக்கணும்ன்னு
நாம் நினைக்கறதுலதான் நிறைய
பிரச்சினைகளும் குடும்பச்சண்டைகளும்
இருக்கு!
இதுக்குத்தான்
சின்ன பசங்க நாம செஞ்சது
தப்பாவே இருந்தாலும் “சாரி”
கேளுன்னு சொல்லறதை நான்
விரும்பலை.
இதோ
பார்,
அம்மாவே/
அப்பாவே
-
தான்
செஞ்ச தப்புக்கு மன்னிப்பு
கேக்கறார்!
ந்னு
தோணினாலும் தோணும்.
அல்லது
மத்தவங்க எனக்கு தப்பு பண்ணினா
(அது
தப்பா இல்லையான்னு சின்ன
பசங்களுக்குத்தெரியுமா?
தப்புன்னு
அவங்க நினைக்கறாங்க.)
மத்தவங்க
எங்கிட்ட மன்னிப்பு கேட்டாக
வேணும் என்கிற ஒரு பிடிவாதத்தையும்
தோற்றுவிக்கலாம்.
ஜாக்கிரதை!
No comments:
Post a Comment