இங்கே
நாம் கவனிக்க வேண்டியது
என்னன்னா பாதிக்கப்பட்டவர்
எப்படி உணர்கிறார்?
அடப்போடா,
கிடக்கட்டும்ன்னா?
இல்லை
பெரிய மன வருத்தமா?
நான்
செய்த எது பாதிச்சது?
நான்
செஞ்சேன் என்கிறதா?
நான்
தனியா கூப்பிட்டு திட்டி
இருக்கலாம்;ஆனா
பொதுவில செஞ்சேன்,
மானம்
போச்சு என்கிறதா?
நாம்
செஞ்சத வேற எப்படி செஞ்சு
இருக்கலாம்?
இதை
எல்லாம் முதல்ல நாம் ஒத்துக்கணும்.
அது
வரைக்கும் ’சாரி”க்கு மேல
ஒண்ணும் சொல்ல வேணாம்.
அவர்
எப்படி உணர்கிறார்ன்னு புரியாம
நாம் சொல்கிற எதுவும் போலியாத்தான்
தொனிக்கும்.
உதாரணமா
நாம் சொல்லக்கூடியது:
நான்
செஞ்ச விமர்சனம் உனக்கு
பிடிக்கலை போலிருக்கு;
உன்
உணர்ச்சிகளை நான் சரியா
புரிஞ்சுக்கலைன்னு நினைக்கிறாயா
என்ன?
உன்
மாணவர்கள் எதிரே நான் பழைய
ஞாபகத்திலே ரொம்ப உரிமையோட
டேய் குண்டப்பான்னு கூப்பிட்டது
தப்புதான்.
அதனால
உனக்கு என் மேல கோபமும் பசங்க
எதிரே இப்படி மானக்குறைவா
ஆயிடுத்தேன்னும் நீ நினைச்சா
அது சரிதான்.
நான்
அப்படி செஞ்சு இருக்கக்கூடாது.
மன்னிச்சுடுப்பா.
இங்கத்தான்
நாம் ஏதேனும் சாக்குப்போக்கு
சொல்லவோ,உண்மையாகவே
இருக்கக்கூடிய காரணம் சொல்லவோ
அல்லது நாம செஞ்சது சரிதான்ன்னு
நிரூபிக்கவோ முயற்சி செய்ய
வாய்ப்பு இருக்கு.
அதை
செய்யக்கூடாது.
அதுக்கு
இது நேரமில்லை.
யாரையும்
திருத்த வேண்டிய அவசியம்
இருந்தா அதை அப்புறமா
பாத்துக்கலாம்.
இப்போதைக்கு
உறவை சரி செஞ்சுக்கணும்.
’தப்பு’
நடந்ததுக்கு சரியான விளக்கம்
இருக்கு.
அதாவது
என் கையில நிலமை இல்லாம
போயிடுத்து.
என்ன
சொல்லி மன்னிப்பு கேட்க?
உனக்கு
வருத்தம்/
கோபம்
/
… ஏற்பட்டு
இருக்கு.
அதுக்கு
நான் ஏதோ ஒரு வகையில்
காரணமாயிட்டேன்.
அது
எனக்கும் கஷ்டமா இருக்கு.
மன்னிச்சுடு.
- தொடரும்
No comments:
Post a Comment