19.
“இந்த
மாதிரி கஷ்டப்படறது நீ
மட்டுமில்ல.”
தனக்கு
மட்டும் இப்படி நடப்பதா ஒரு
கற்பனை இருக்கலாம்.
அப்படி
இல்லை நிறைய பேருக்கு வர
பிரச்சினைதான்;
அதை
வெற்றிகரமா தோற்கடிக்கலாம்னு
தெரிஞ்சா ஆறுதலா இருக்கும்.
20.
“அப்படி
என்னதான் ஆயிடும்ன்னு யோசிச்சு
சொல்லேன்l”
இந்த
பயிற்சி பெரியவங்களுக்கும்
பொருந்தும்.
என்னதான்
ஆயிடும்?
ரொம்ப
ரொம்ப மோசமா என்ன நடக்க
முடியும்?
அதை
தாங்கிக்க முடியுமா?
வேற என்ன
விதமான மோசமான விளைவு ஏற்படலாம்?
இதை
விவாதிச்ச பிறகு..
சரி ரொம்ப
நல்லவிதமா எப்படி முடிய
வாய்ப்பு இருக்கு?
கொஞ்சம்
நல்லவிதமா?
சரி,
இதே போல
முன்னே நடந்திருக்கா?
அது எப்படி
முடிஞ்சது?
இப்ப அதே
போல முடியணும்ன்னு ஒண்ணுமில்லே.
எப்படி
முடியும்ன்னு நீ நினைக்கிறே?
21.
“சில சமயம்
கவலைப்படறது நல்லதுதான்.”
என்னது?
ஆமாம்.
சில சமயம்
நல்லதுதான்.
கண்டுக்காம
விடறதை விட கவலைப்பட்டா,
அப்ப
தீர்வு ஏற்பட வாய்ப்பு இருக்கு.
இது முழுக்க
முழுக்க நடக்கக்கூடாத விஷயம்ன்னு
இருக்கக்கூடிய கறபனையை கொஞ்சம்
உடைக்கலாம்!
22.
“உன் மனசு
பப்பிள்ள என்ன எழுதி இருக்கு?”
காமிக்ஸ்ல
வர கேரக்டர் என்ன யோசிக்கிறதுன்னு
சொல்ல அதன் தலை மேல ஒரு பப்பிள்
போட்டு எழுதி யிருப்பாங்க.
காமிக்ஸ்
படிக்கிற குழந்தைகளுக்கு
அது எப்படி கதையை மேலே
நகர்த்தும்ன்னு தெரியும்.
அதனால
இப்படி வித்தியாசமா கேள்வி
கேட்டா குழந்தை மூணாம் மனுஷனா
யோசிக்கும் வாய்ப்பு அதிகம்.
ஒரு தெளிவு
கிடைக்கும்.
23.
“ரைட்!
அப்ப
அதுக்கு கொஞ்சம் ஆதாரம்
இருக்கான்னு கண்டுபிடிக்கலாம்.”
பயம்,
மனக்கலக்கம்
ஆதாரத்துடன் இருக்கா இல்லை
வெத்து கற்பனையான்னு யோசிக்க
வைக்கறதால சரியான சிந்தனையை
தூண்டலாம்.
24.
“அதைப்பத்தி
விவாதிக்கலாமா?”
வளர்ந்த
குழந்தைகள் தான்தான் சரின்னு
நினைக்கிறது வழக்கம்தானே?
வழக்கமா
நாம அதை அடமடக்குவோம்.
அப்படி
இல்லாம அதை விவாதிக்க ஒரு
வாய்ப்பு கிடைச்சா?
இரண்டு
பக்கமும் பார்க்கிற ஒரு
ஆரோக்கியமான விவாதத்தை
ஆரம்பிச்சு நடத்துங்க.
அவங்களோட
மன ஓட்டம் நமக்கு புரிய வரும்.
- தொடரும்
No comments:
Post a Comment