Wednesday 1 March 2017

குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 3

13. “அதப்பத்தி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்.”

அறிவே மருந்து. குழந்தைகள் எது அவங்களை பயப்படுத்தறதோ அதைப்பத்தி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கட்டும். அதப்பத்தி எவ்ளோ கேள்வி வேணும்னாலும் கேட்கட்டும்.

14. “கொஞ்ச நேரம் எண்ணலாமா?”

இந்த வழிக்கு முன்னேற்பாடு எதுவும் தேவையில்லை. பராக்கு காட்டணும். இந்த ரூமில எத்தனை கருவி நேரம் காட்டறது? கணினி, கடிகாரம், செல் ஃபோன் ந்னு லிஸ்ட் பெரிசாவே போகும்! தெருவை பார்த்துக்கொண்டு இருந்தா எத்தனை பேர் புடவை கட்டிக்கொண்டு போறாங்க, எத்தனை பேர் ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு போறாங்க... இது போல பலதையும் யோசிச்சு செயல்படுத்தலாம். இது எல்லாமே மனக்கலக்கத்தை தணிக்கும்.

15. “அதோ அந்த கடிகாரத்தை பாத்துண்டே இரு. பெரிய முள்ளு ரெண்டு தரம் சுத்தி வந்ததும் உடனே சொல்லணும்; சரியா?”

கடிகாரத்தை கவனிக்கறதுல மனக்குவிப்பு போச்சுன்னா மனகலக்கம் குறையும்.

16. “கண்ணை மூடிக்கோ; இதை கற்பனை பண்ணிப்பாரு....…”

கற்பனை செய்து பார்க்கிறது என்கிறது வலியையும் மனக்கலக்கத்தையும் குறைக்கிற வலுவான சாதனம். குழந்தையை கற்பனையில் பாதுகாப்பான, ஹிதமான, சந்தோஷமான இடத்துக்கு கூட்டிபோய் அங்கே சௌக்கியமாக வைக்கலாம். கொஞ்சம் கவனத்துடன் நாம் விவரிக்கிறதை அவங்க கேட்டா மனக்கலக்கத்தின் தாக்கம் கொஞ்சமாவது குறையும்.

17. “எனக்கும் அப்பப்ப பயம், தடுமாற்றம், மனக்கலக்கம் எல்லாம் வரும். அது சந்தோஷமா இருக்காதுதான்!”

பல இடங்களில எம்பதி என்கிற புரிந்துணர்வு ஜெயிக்கும்! கொஞ்சம் வளர்ந்த குழந்தை “அப்படியா? அதை எப்படி ஜெயிச்ச?” ன்னு கேட்கும். சுவையான உரையாடல் தொடர நிறைய வாய்ப்பு இருக்கு!

18. “நம்பளோட ‘சாந்திக்கான வழி முறை’ லிஸ்டை எடுப்போமா? என்ன சொல்லி இருக்குன்னு பார்க்கலாம்.”

மனக்கலக்கம்ன்னா லாஜிக் காணாம போயிடும். காரண காரியம் யோசிக்க மாட்டோம். அதனால இதை சமாளிக்க குழந்தைக்கு பயிற்சி கொடுத்து இந்த பயிற்சிகள் அடங்கிய பட்டியல் ஒண்ணு தயார் செஞ்சு வெச்சுக்கணும். இந்த மாதிரி சந்தர்பங்களில அதை எடுத்து படிச்சு சில பயிற்சிகளை செய்யும் பழக்கம் வந்தா நல்லது.

No comments:

Post a Comment