Tuesday 28 February 2017

குழந்தைகளின் மனக்கலக்கத்தை கையாள ... - 2

7. “நீயும் நானும் சேர்ந்தா ஜெயிக்கிற டீம்.”

தனிமை என்கிறது சிறு குழந்தைகளுக்கு மிகவும் கலக்கத்தை தருவது. அதனால நாம எப்பவும் கூடவே இருக்கோம் என்கிறதா அவங்க உண்ரும் படி நடந்துக்கணும். நேரடியா பார்க்க முடியாதப்பக்கூட அவங்க தனியா இல்லைன்னு சொல்லணும்.

8. தனக்குன்னு ஒரு கோஷம் இருக்கட்டும்: “ஜெய் ஹனுமான்!”; “ஜெய் ஸ்ரீராம்”; அல்லது “நா சூப்பர்மேன்!” இது போல ஏதாவது.

குழந்தைகளுக்கு இது தமாஷா கூட இருக்கும்! சினிமாக்களிலோ அல்லது டிவி சீரியல்களிலோ அந்த காலத்து போர் காட்சிகள்ன்னா அதுல படைகள் ஏதாவது கோஷம் போட்டுக்கொண்டே சண்டைக்கு ஓடுவாங்க. ஹர ஹர மஹா தேவ்! அடி கொல்லு! ரீதியில ஏதாவது கோஷம் இருக்கும். இந்த மாதிரி செய்யறது பயத்தால சுரக்கிற ரசாயனத்துக்கு பதில் எண்டார்பின்ஸ் ஐ சுரக்க வைக்கும். அது நல்லது! துணைக்கு யாரும் இல்லைன்னா என் பேரன் ஹனுமான் சாலீஸா சொல்லிக்கொண்டே டாய்லெட்டுக்கு போறான்.

9. “நீ அனுபவிக்கற கலக்கம் ஒரு ராட்சசன்னா அது பார்க்க எப்படி இருக்கும்?”

மனக்கலக்கத்துக்கு ஒரு உருவம் கொடுக்கறதால இனம் புரியாததுக்கு ஒரு உணரக்கூடிய தன்மை கிடைச்சுடும். கலக்க ராக்ஷசனோட அவங்களால பேச முடியும்!

10. “....க்காக காத்துண்டு இருக்கேன். அது வர வரைக்கும்....”

எதிர்காலத்தைப்பத்திய ஒரு பரபரப்பு ஒரு தொத்து வியாதி! அது கலக்கத்தை துரத்திட்டு அதோட இடத்தை பிடிச்சுண்டா நல்லது!

11. “உன் கவலையை இதோ இந்த டப்பால இறக்கி வெச்சுடலாம். உனக்கு பிடிச்ச பாட்டை கேட்டுட்டு/ விளையாட்டை விளையாடிட்டு/ கதையை படிச்சுட்டு அப்புறம் அத திருப்பி எடுத்து வெச்சுக்கலாம்.
மனக்கலக்கத்துக்கு அடிக்கடி ஆளாகிறவர்கள் பல சமயம் கலக்கத்தை ஏற்படுத்துகிற சமாசாரம் முடியற வரை அந்த கலக்கத்தை அனுபவிச்சுக்கொண்டே இருப்பாங்க. அதை தனக்கு பிடிச்ச விஷயத்துக்காக ஒதுக்கி வைக்க கத்துக்கலாம். அப்புறமா வந்து பார்க்கும் போது அதைப்பத்தி வேற கோணம் கிடைக்கலாம். அது நல்லது.

12. அடிக்கடி கேட்டு இருப்போமே? “இதுவும் கடந்து போகும்.” அது வரைக்கும் சௌகரியமா ரிலாக்ஸ்டா இருப்போம். இதையும் சேர்த்துக்கலாம்.

சௌகரியமா இருக்க முடிஞ்சா போதும். ரிலாக்சேஷனை அதுவே கொண்டு வந்துடும். மனக்கலக்கம் இறுக்கத்தை தரா மாதிரி ரிலாக்சேஷன் கலக்கத்தை மனக்கலக்கத்தை குறைக்கும். கொஞ்சம் கனமான போர்வை குழந்தைகளை சௌகரியமா வெச்சுக்கும்ன்னு ஆராய்ச்சிகள் சொல்லுது. இதமா அழுத்தறதாலயா இருக்கலாம்.

-ொடும்

No comments:

Post a Comment