Friday 17 February 2017

முடிவுரை - 2

முடிக்கும் முன்னே இந்த உசாநு நமக்கு என்ன செய்யப்போகிறதுன்னு சுருக்கமா பார்க்கலாமா?

1. ஒவ்வொரு நிகழ்வையும் தனித்துவமா இருக்கறதா பார்த்து அதுக்கு தகுந்தாப்போல செயல்படுவோம். டெம்ப்லேட் ரெஸ்பான்ஸ்ன்னு இல்லாம.

2. பொறுப்பு: நம் வாழ்க்கையை நம் பொறுப்புல எடுத்துப்போம். கர்மா தியரி சரியா புரியும். நாம் இது வரை செய்த செயல்களோட விளைவுதான் நம்மோட இப்போதைய நிலமைன்னு புரியும். அதனால ஏதும் தப்பா நடந்தா மத்தவங்களை குத்தம் சொல்ல மாட்டோம். அடுத்த முறை எப்படி வித்தியாசமா இன்னும் பொருத்தமா செய்யலாம்ன்னு யோசிப்போம்.

3. புத்தியைவிட தொலைநோக்குப்பார்வை இன்னும் முக்கியம்ன்னு புரியும். நம்மகிட்ட எல்லாத்துக்கும் விடை இராது. பிரச்சினையை சரியா புரிஞ்சு கொண்டு வழிகளை கற்பனை செய்வோம். தீர்வை கொண்டு வர பல வழிகளை தேடி அடைவோம்.

4. நாளைய சவால்களை எதிர்கொள்ள இன்னைக்கு தயார் செய்யணும்ன்னு புரியும். அதனால புதுசு புதுசா கத்துகிட்டே இருப்போம். வளர்ச்சி தொடர்ந்து இருக்கறதை உறுதி செய்வோம்.

5. எதையும் செய்ய பல வழிகள் இருக்கலாம்; நாம் செய்ததை விட வித்தியாசமா இருக்கலாம்; எப்பவுமே நாம் செய்ததைவிட இன்னும் சிறப்பா செய்ய வழி இருக்கலாம்ன்னு புரியும். அதனால மாற்றுக்கருத்துகள் வந்தா அசர மாட்டோம். அதை ஆராய்ஞ்சு அது இன்னும் நல்லதா தோணினா ஏத்துப்போம்.

6. மத்தவங்களோட கருத்தளவில ஒத்துப்போகலைன்னாலும் அவங்களை விமர்சனம் செய்யணும்ன்னு உந்துதல் இராது. விசித்திரமானதுதான் இந்த உலகம். மத்தவங்களுக்கு மாற்று கருத்து கொண்டிருக்கும் உரிமை உண்டுன்னு தெளிவா இருப்போம்.

7. எப்பவுமே எல்லாமே நல்லபடியா முடிஞ்சுடாது. ஏதேனும் பின்னடைவுகள் இருக்கலாம்; தோல்விகள் இருக்கலாம். மன வருத்தங்கள் ஏற்படலாம். நாம இதால் கொஞ்சம் வருந்தினாலும் நம் உணர்ச்சியை சரியானபடி வெளிப்படுத்திட்டு, இப்ப செய்யக்கூடிய. செய்ய வேண்டியதை செய்ய முனைந்து, அவற்றிலேந்து பாடங்கள் கத்துகிட்டு மேலே நகருவோம்.

8. 100% நேரம் சாந்தமாவே இருக்கறது அரிதுதான். இருந்தாலும் பெரும்பாலான நேரம் சாந்தமாவே இருப்போம். அது இயலும்.

9. நமக்கு வீண் கற்பனைகள் இல்லை. வெற்றிக்கு பொறுமையும் முயற்சியும் தேவைன்னு தெரியும். இருந்தாலும் எல்லம் நல்லா நடக்கும்ன்னு ஒரு நேர்முறை எண்ணத்தோட செயலாற்றுவோம். வாழ்க்கை நம் பக்கம் வீசி எரியற எதையும் தைரியமா எதிர்கொள்ளுவோம். தேடினா வாய்ப்புகள் எப்படியும் கிடைக்கும்ன்னு நம்பிக்கையுடன் இருப்போம்.

10. நாம் பலருடன் இசைவோட இருப்போம். மத்தவங்க நம்மோட இசைவுடன் இருக்க பிரியப்படுவாங்க; அது சுலபமாகவும் இருக்கும். நல்ல உறவுகள் ரொம்ப மெனக்கெடாமலே தானே நிகழும்.

11. மத்தவங்க நம்மை பாராட்டி புகழும்போது அதை சந்தோஷமா ஏத்துப்போம். இருந்தாலும் நம்மை சிலர் வெறுத்தாலும் நாம செய்யறது சரி என்கிற நம்பிக்கை, துணிச்சல் நமக்கு இருக்கும். அவங்க என்ன நினைப்பாங்கன்னு கவலைப்படாம சரின்னு நமக்கு பட்டதை செய்து கொண்டு போவோம்.

12. எப்பவும் மகிழ்ச்சியாவே இருப்போம். மத்தவங்களோட சிரிச்சு ஜோக் அடிச்சு மகிழ்ந்து…. அந்த ஜோக் நம்மைப்பத்தியதாவே இருந்தாக்கூட!


வாழ்த்துகள்!

No comments:

Post a Comment