உணர்வு
சார் நுண்ணறிவு பற்றி படிக்கும்/
யோசிக்கும்
போது பெரியவர்களை திருத்த
கஷ்டப்படுவதைவிட குழந்தைகளுக்கு
சொல்லிக்கொடுத்து வளர்த்துவிடலாம்
என்று தோன்றும்.
ஆகவே...
https://goo.gl/IQgBbd
எல்லா
குழந்தைகளுக்கும் ஏதோ ஒரு
ரூபத்தில் இது இருக்கு!
மனக்கலக்கம்!
பெற்றோர்களாகிய
நாம் இதிலிருந்து குழந்தைகளை
மறைத்து காக்க விரும்பலாம்.
ஆனால்
இதை கையாள கற்பது அவர்களுக்கு
வரும் காலத்தில் இன்னும்
நல்லதாக இருக்கும்.
அதனால
பின் வரும் கேள்விகளை பொருந்தும்
நேரங்களில் கேட்பதால அவர்கள்
மனக்கலக்கத்தை அடையாளம்
கண்டு ஒப்புக்கொண்டு அதிலிருந்து
விடுபடுதலை அவர்களே கற்பார்கள்.
இந்த
எளிய கேள்விகளை பார்க்கலாமா?
1.
“அதை
வரைய முடியுமா?”
சில
சமயம் குழந்தைகளால அவர்களோட
மனக்கலக்கத்துக்கு காரணத்தை
வார்த்தைகளில விவரிக்க
முடியாது.
அப்போ
அவர்கள் தம் மனக்கலக்கத்துக்கு
ஒரு வடிகாலா அதை ஏதோ ஒரு வகையில்
வரைந்தா -
அது
கிறுக்கலா இருக்கலாம்,
கலர்
பெய்ண்டிங்கா இருக்கலாம்-
அது
நல்லதா இருக்கும்.
2.
“கண்ணா
உன்னை எனக்கு ரொம்பபிடிக்கும்.
நீ
என்கிட்ட பாதுகாப்பா இருக்கே!”
இப்படி
சொல்லறது வலிமையானது ....
குழந்தைகளை
நேசிக்கும் ஒத்தர்கிட்ட
அவங்க இருக்கறதா அவங்களுக்கு
தோணறது அவர்களோட நரம்புகளை
இதமா வருடிக்கொடுக்கும்.
மனக்கலக்கம்
அடிக்கடி அவர்களோட மனசும்
உடலும் பாதுகாப்பு இல்லாம
இருக்கறதா அவர்களுக்கு
உணர்த்தலாம்.
3.
“நாம
ரெண்டு பேரும் ஒரு பலூனை ஊதறதா
நடிக்கலாமா?
ஒரு
பெரிய மூச்சை எடுத்துண்டு
அஞ்சு எண்ணற வரைக்கும் நாம
ரெண்டு பேரும் சேந்து பலூனை
ஊதுவோம்.”
குழந்தை
பீதி அடைஞ்சு இருக்கற நேரம்
நல்லா மூச்சு எடுத்துவிடுன்னா
“முடியலை!” ன்னு
பதில் வரும்.
அதனால
அதை ஒரு விளையாட்டா ஆக்கிடலாம்.
மூணு
மூச்சு எடுத்து பலூனை ஊதும்
போது ’பர்ர்ர்ர்ர்’ என்கிறது
போல விசித்திரமான சத்தங்களையும்
எழுப்பலாம்.
குழந்தையும்
அதை இமிடேட் செய்து சிரிக்கும்!
மன
அழுத்தம் ஓடிப்போயிடும்!
4.
“ நா
சொல்றா மாதிரியே நீயும்
சொல்லணும்,
சரியா?”
பின்னர்
‘என்னால இது செய்ய முடியும்!’
என்று
பத்து முறை பத்து விதங்களில்
குரலை உயர்த்தி,
தாழ்த்தி,
கீச்சுக்குரலில்
என்று விதவிதமாக செய்யவும்.
5.
“அது
ஏன் அப்படி இருக்குன்னு
சொல்லேன்?”
கொஞ்சம்
வளர்ந்த குழந்தைகளுக்கு
பொருத்தமானது.
ஏன்
என்கிற ஆராய்ச்சி புத்தி
பூர்வமானது.
மனசை
பின்னுக்கு தள்ளி புத்தி
முன்னுக்கு வரும்போது உணர்வுகள்
மழுங்கும்.
மேலும்
ஏன் என்பதற்கு அவர்கள்
விடையையும் கண்டு பிடித்துவிட்டால்
மிகவும் நல்லது.
6.
“அடுத்து
என்ன நடக்கும்?”
மனக்கலக்கம்
கிட்டப்பார்வையை உருவாக்கும்.
தற்போதைய/
அடுத்து
வர நிகழ்வைத் தாண்டி யோசிக்க
முடியாது.
ஒரு
நிகழ்வை பத்தி குழந்தைக்கு
மனக்கலக்கம் இருந்தா,
அதைத்தாண்டி
அவர்களை யோசிக்க வைக்கிறது
நல்லது.
‘இந்த
ஆட்டத்தில் இப்ப தோத்து
போயிடுவேன்;
அதனால
என்ன?
அடுத்த
முறை முயற்சி செஞ்சு ஜெயிக்கலாம்!”
என்கிற
ரீதியில் யோசிக்க ஆரம்பித்து
விட்டால் நல்லது.
- தொடரும்
- தொடரும்
No comments:
Post a Comment