14. உங்க
விமர்சனத்தை நேரடியாகவும்
ஆக்க பூர்வமாகவும் செய்யுங்க!
உங்க
செயல்களுக்கு கிடைச்ச
விமர்சனங்களை நினைவிருக்கா?
அதெல்லாம்
எங்க மறக்க முடியும்ன்னு
கோபப்படறீங்களா? அமைதி,
அமைதி!
அதெல்லாம்
எப்பவும் நாம விரும்பறா மாதிரி
இருந்திருக்காதுதான்.
ஆனா நம்ம
செயல்களை அவை கொஞ்சமாவது
மாத்தியிருக்கும். சமூக
வலத்தளங்கள் ‘வளர்ந்து’விட்ட
இந்த காலத்தில விமர்சனம்
செய்ய தகுதின்னு ஒண்ணு
தேவையில்லைதான். வெட்டியா
பொழுது போக்கற ஆசாமிக்கு
ஏதானாலும் சரி, கருத்து
சொல்ல ரெடியா இருப்பாரு.
அது விஷயமில்லை
இங்கே.
இங்க
விஷயம் நாம முன் வைக்கிற
விமர்சனம். இதுக்கு
உசாநு வோட நாலு திறன்களும்
தேவையா இருக்கு. அப்பத்தான்
அது நல்ல விமர்சனமா இருக்கும்;
நல்ல உறவை
உருவாக்கும். முதல்ல
இந்த விமர்சனத்தை முன்
வைக்கறதுக்கு நம்ம உணர்வு
எப்படி இருக்கு? ஒண்ணும்
பிரச்சினை இல்லையே?
இல்லை ஒரு
வேளை ‘என்னவோ அது கொஞ்சம்
சங்கடமா இருக்கு’ நு தோணுதா?
ஆமாம்னா
ஏன்? இல்லையா?
ரைட்!
அடுத்து
விமர்சனத்தப்ப நாம வெளிப்படுத்த
வேண்டிய உணர்வு என்ன?
மத்தவங்க
உணர்வை புண் படுத்தாம எவ்வளவு
தூரம் போகலாம்?
விமர்சனம்
யாரைக்குறிச்சு வைக்கிறோமோ
அவங்களைப்பத்தி யோசிங்க.
அவங்களுக்கு
நாம வைக்கிற விமர்சனம்
தெளிவாகவும், நேரடியாகவும்,
ஆக்கப்பூர்வமாகவும்
மரியாதையோடவும் இருக்கறதா
தோணனும். நல்லா
நினைவிருக்கட்டும்.
நம்மோட
விமர்சனம் அந்த நபரை குறிச்சது
இல்லே. அவரோட
செயலையோ எண்ணத்தையோ குறிச்சது.
நல்ல
விமர்சனத்துல இரண்டு பகுதிகள்.
ஒண்ணு நம்ம
கருத்தை பகிர்ந்து கொள்வது.
இரண்டாவது
மாறுவதற்கு தீர்வுகள்.
எல்லா
விமர்சனங்களும் தேன்ல குழைச்சு
கொடுக்கணும்ன்னு இல்லை.
சிலருக்கு
நேரடியா சொல்லறதே பிடிக்கலாம்.
சிலருக்கு
பூடகமா சொன்னா புரியாது.
உதாரணமா
பாருங்களேன். ‘நீங்க
இப்படி தப்பு பண்ணறீங்க’
ன்னு சொன்னா பலருக்கும்
பிடிக்காது. அதே
‘பல சமயம் நாம இப்படி தப்பு
செய்யறோம்’ ன்னு சொல்லிப்பாருங்க!
ரொம்ப
சென்சிடிவா இருக்கறவங்களுக்கு
‘என் ரிப்போர்ட் படு மோசம்’
ந்னு சொல்லாம ‘இன்னும் நல்லா
இருக்கலாம். எப்படின்னு
நாம கலந்து பேசலாமா?’
ந்னு சொன்னா
இன்னும் நல்லது!
No comments:
Post a Comment