முடிவுரை:
இந்த
உணர்வு சார் நுண்ணறிவு நம்
வாழ்கையையே புரட்டிப்போடக்கூடியது.
இது மட்டுமே
போதும் என்று இல்லை.
ஆனால் நாம்
நம் வாழ்க்கையை இன்னும்
திறம்பட நடத்த இது பேருதவியாக
இருக்கும் என்பதில் எனக்கு
சந்தேகம் இல்லை.
ஒரு
சூ மந்த்ராகாளி போட்டு
வாழ்க்கையை இது மாற்றிவிடாது.
நாம் இதுக்கு
நிறையவே உழைக்கணும்.
ஆனால் இதன்
விழிப்புணர்வே நம் வாழ்க்கையை
பெருமளவு மாற்றிவிடும்.
மீதிக்கு
உழைத்தே சாதிக்க வேணும்.
நாம் மாறுவதால்
இதை பார்த்து உணர்ந்து
மற்றவர்களும் மாறும் வாய்ப்பு
அதிகமாகவே இருக்கிறது.
இதில்
இன்னும் ஆராய வேண்டிய விஷயங்கள்
நிறையவே இருக்கின்றன.
உணர்ச்சி
மனசை ஹைஜாக் செய்துவிடாமல்
புத்தி நிலைக்கு மாற்றிவிடலாம்தான்.
ஆனால் அப்புறம்?
புத்தி எப்படி
வேலை செய்யப்போகிறது?
ஒருவர்
நம்மை கண்டபடிக்கு திட்டுகிறார்.
நாம் உசாநு
வை பயன்படுத்தி திருப்பி
திட்டாமல் அடிக்காமல்
இருக்கிறோம். ஆனால்
என்ன செய்யப்போகிறோம்?
போகட்டும்ன்னு
விட்டுவிடுவோமா? இல்லை
திட்டம் போட்டு ஆசாமியை
கவிழ்ப்போமா? வேற
கெடுதல் செய்வோமா?
உண்மையில்
இதுதான் நம்மை யார் என்று
காட்டப்போகிறது! இதுக்கு
எமோஷனல் மெசூரிடி என்கிறார்கள்.
உசாநுவே
எல்லாம்ன்னு இல்லை. அது
பிரச்சினையை அடையாளம் காட்ட
உதவும். எப்படி
கையாளுவது என்கிறது புத்தியோட
வேலை. அதுதான்
ஆராயணும். இங்க
ஆளாளுக்கு ஒரு லிமிடேஷன்
இருக்கும். ஆனா
சுய விழிப்புணர்வு ‘டேய்,
இதுக்கு நம்
அறிவுக்கெட்டிய தீர்வு இல்லை.
யாரானா
நிபுணரை கேட்கலாம். அதுல
அவமானம் ஒண்ணும் இல்லை!”
ந்னு சொல்வதால
வேற உதவியையும் நாடுவோம்.
எப்படியும்
சில தேர்வுகள் இருக்கும்.
அதில எதை
தேர்ந்தெடுப்போம் என்கிறதுதான்
நம்மை 'டிஃபைன்’
செய்யும்! அடையாளம்
காட்டும்!
இங்கேதான்
மூணாவது காரணியான பர்சனாலிட்டியும்
வேலை செய்யும்! இதை
மாத்திக்க முடியாதுன்னு
ஆரம்பத்திலேயே பார்த்தோம்,
இல்லையா?
முதலில்
உணர்வு சார் நுண்ணறிவை அடைவோம்.
மேலும் பல
விஷயங்களை நாமே கண்டுபிடிக்கலாம்.
இது வளர்ந்து
கொண்டு இருக்கும் ஒரு துறை.
உத்திகளோ,
பயிற்சிகளோ
நிறைய புதுசாக கண்டுபிடிக்கவும்,
பரப்பவும்
வாய்ப்பிருக்கிறது.
அடுத்த பதிவுடன் நிறைவுறும்! அப்பாடா!
No comments:
Post a Comment