10. ’நல்லா’
தூங்குங்க!
சுய மேலாண்மைக்கு
தேவையானது பொறுமை,
நெகிழ்ந்து
கொடுப்பது, விழிப்புடன்
இருப்பது. இது
எல்லாம் சரியான தூக்கம் இல்லாம
போச்சுன்னா காணாமப்போகும்.
இவ்வளவு
நேரம் என்கிறது மட்டுமில்லை.
நல்லா ஆழ்ந்து
தூங்கறோமா?
ஆழ் தூக்கத்திலதான்
நம்ம மூளை தன்னை டீஃப்ராக்
(defrag) செஞ்சுக்கும்!
அன்னய நடப்பில
கிடைச்ச தேவையான நினைவுகளை
வெச்சுக்கொண்டு வேண்டாததை
நீக்கி… ந்யூரோ கெமிக்கல்ஸ்
எல்லாம் ரீ ஜெனரேட் ஆகி… காலை
எழுந்துக்கும் போது ஃப்ரெஷா
எழுந்துப்போம். சரியான
தூக்கம் இல்லைன்னா எழுந்துக்கும்போதே
ஒரு எரிச்சல், அயர்வு….
ஏண்டா
விடிஞ்சதுன்னு ஒரு உணர்வு!
சில குறிப்புகள்:
மதிய உணவுக்கு
முன்னால குறைஞ்சது 20
நிமிட சூரிய
ஒளி நம் கண்களில படட்டும்.
(கூலிங்
க்ளாஸ் போட்டுண்டு பார்க்கிறதெல்லாம்
கணக்கில வராது!) அப்பத்தான்
நம்மோட உள்ளே இருக்கிற கடிகாரம்
தன் நேரத்தை சரி செஞ்சுக்கும்!
தூங்கும்
முன்னே 2 மணி
நேரமாவது கணினி திரையை பாராம,
செல்போன்ல
நோண்டாம இருக்கணும்.
பெட்ல
படுத்துண்டு டிவில அழுவாச்சி
சீரியல் எல்லாம் பார்க்ககூடாது.
பெட்
படுத்துத்தூங்க மட்டுமே!
கஃபீன்!
காலையில
எட்டு மணிக்கு ஒரு காபி
குடிக்கிறோம். ஆறு
மணி நேரத்தில உடம்பில இருக்கற
கஃபீன்ல பாதி உடம்பால
வெளியேற்றப்படும்.
அடுத்த ஆறு
மணி நேரத்தில? அதுல
பாதி வெளியே போகும்,
அவ்ளோதான்.
அதாவது காலை
8 மணிக்கு
குடிச்ச காபில இருக்கற கஃபீன்ல
கால்வாசி ராத்திரி எட்டு
மணிக்கு இருக்கும்!
கபீனுக்கும்
தூக்கத்துக்கு எட்டாம்
பொருத்தம்! அதனால
மதியத்துக்கு மேலேயாவது
தவிர்க்கவும். டீ
பரவாயில்லை.
இதுல காபி
குடிச்சுட்டு உடனே தூங்கற
என் தம்பி எல்லாம் எக்செப்ஷன்.
ஒவ்வொத்தரும்
ஒரு மாதிரி, இல்லையா?
No comments:
Post a Comment