Wednesday 28 December 2016

1. பெயர் சொல்லி அழையுங்கள்.

1. பெயர் சொல்லி அழையுங்கள்.
தாத்தா/பாட்டி பெயரை வைத்தார்களோ அபிமான நடிகர்/நடிகை பெயரை வைத்தார்களோ பெயர் என்பது ஒருவருடைய அடையாளமாகி விட்டது. நீ யார் என்று கேட்டால் பலரும் தன் பெயரைத்தான் சொல்கிறார்கள். உண்மையில் அந்த கேள்விக்கு பதில் என்ன என்று தத்துவத்துக்குள் நாம் போக வேண்டாம்!
எங்க ஊர்ல ஒரு டாக்டர்.
மத்த டாக்டர்கள் ….. ? அவருக்கு என்ன தெரியும்? ம்பாங்க.
ஆனா அவங்களுக்கு தெரியாத ஒண்ணு இவருக்கு தெரிஞ்சு இருந்தது!
இவர் கொஞ்சம் வித்தியாசமான ஆசாமி. நோயாளியை பெயர் சொல்லி அழைப்பார்

என்ன ராமசாமி எப்படி இருக்கீங்க? ந்னு விசாரிப்பார். இப்படி விசாரிக்கறதிலேயே நோயாளிகள் மகிழ்ந்து போய்விடுவார்கள்.
சார் எனக்கு நாலு நாளா…
உன் ரெண்டாவது பொண்ணு சாந்திய நெல்லிக்குப்பத்தில கட்டிக்கொடுத்தியே எப்படி இருக்கா?
நல்லா இருக்கா சார்! இப்ப நாலு மாசம்
வெரி குட்! உன் தம்பி பையன் சரவணன் சவுதில வேலைக்கு போனானே, நல்ல வேலையா கெடச்சுதா?
இப்படி அஞ்சு நிமிஷம் போகும்!
அப்புறமாத்தான் பேஷண்ட் தன் பிரச்சினையை சொல்ல முடியும். மருந்து எழுதி கொடுப்பார். சரியாயிடும்.
இப்படி எல்லாரையும் எப்படி நினைவு வெச்சுக்கறீங்கன்னு ஒரு தரம் கேட்டேன். சிரிச்சுண்டே அது ‘காட்ஸ் கிஃப்ட்’ ந்னார்!

எல்லாரையும் நினைவு வெச்சுக்க வேணாம். ஒத்தரை நமக்குத்தெரிஞ்ச அவரோட பேரை சொல்லிக்கூப்பிட்டாலே போதும்.
அப்படி அதுல என்ன இருக்குன்னு கேட்கறீங்களா? யோசிச்சுப்பாருங்க. மேலே சொன்ன உதாரணத்துப்படி டாக்டர்கிட்ட போனா அவர் பேரைச்சொல்லி எப்படி இருக்கீங்கன்னு விசாரிச்சா எப்படி இருக்கும் நமக்கு? உச்சி குளுந்து போயிட மாட்டோம்?

அது சரி, எப்படி நினைவு வெச்சுக்கிறது?
அவரை முதல்ல சந்திக்கிறப்ப பேர் கேட்போம் சொல்லுவார், இல்லையா? தொடர்ந்து அவரோட பேசும் போது நாலஞ்சு முறையாவது அவரோட பேர் சொல்லி கூப்பிடணும். அப்ப அடுத்த முறை பார்க்கிறப்ப நினைவு இருக்க சான்ஸ் அதிகம்.


அடுத்த மாசம் முழுக்க யாரைப்பாத்தாலும் அவங்களோட பேரைச்சொல்லி கூப்பிடுங்க. இது இப்போதைக்கு பயிற்சி! ஒரே ஒரு எச்சரிக்கை! சில சமூகங்களில தன் பெயரை சொல்லி யாரும் கூப்பிட்டா அதை அவமானமா நினைக்கிறவங்க இருக்காங்க. அவரோட ஜாதி பெயரை சொல்லிகூப்பிட்டா சந்தோஷப்படுவாங்க! எதுக்கும் ஒரு மிஸ்டரை முன்னாலேயோ அல்லது ஒரு சாரை பெயருக்கு பின்னாலேயோ போட்டுக்கலாம்!  

No comments:

Post a Comment