Thursday, 22 December 2016

14. குருக்கள் பலர்....

14. ஸ்ரீமத் பாகவதத்தில உத்தவ கீதைன்னு ஒரு பகுதி. அதுல யயாதியின் மகன் யது அவதூதரான சாதுவை கேட்கிறான்: எப்படி இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க? உங்க குரு யார்? அதுக்கு அவர் பதில் சொல்லறார் “மன்னா! எனக்குப் பல ஆசாரியர்கள். அவர்களிடம் கற்றுக் கொண்ட பாடத்தின் பலத்தில்தான் நான் உலகப் பற்றின்றி இவ்வாறு அவதூதனாகத் திரிந்து கொண்டிருக்கிறேன். என் குருக்கள் யார் தெரியுமா? மண், வாயு, ஆகாயம், நீர், அக்னி, சந்திரன், சூரியன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டிற்பூச்சி, தேனீ, யானை, தேன் எடுப்பவன், மான், மீன், பிங்களை என்னும் வேசி, குரா என்னும் பறவை, பாலகன், கன்னிப்பெண், அம்புதொடுப்பவன், ஸர்ப்பம், சிலந்திப் பூச்சி, குளவி போன்ற இருபத்து நான்கு ஆசிரியர்கள்! ” இப்படிசொல்லி கற்ற பாடங்களை சொல்றார்.

நாமும் விழிப்போட இருந்தா பல குருமார்கள்கிட்டேந்து பாடம் கற்றுக்கலாம்.
ஒரு மீட்டிங்க் போறோம். நம்ம கருத்தை யாரோ மறுத்து பேசறாங்க. நாம் என்ன செய்வோம்? கத்தி கேடயத்தை எடுத்துக்கிட்டு சண்டையில இறங்கிடுவோம்! அவர் மறுத்து பேசிகிட்டு இருக்கறப்பவே கேட்கறதை நிறுத்தி அதுல உண்மை ஏஎதும் இருக்கான்னு ஆராயாம, பதிலை தயார் செய்வோம். அந்த ஆசாமி நிறுத்தின உடனே நாம் திட்ட ஆரம்பிக்கணுமே!


மாறா இந்த ஆசாமி சொல்லறதுல நமக்கு ஏதும் கிடைக்குமான்னு பாத்துகிட்டே இருந்தா சில உண்மைகள் புலப்படலாம். நாம கார்ல போறப்ப நடுவில சர்ர்ர்ன்னு குறுக்கே புகுந்து போகிற அறிவு கெட்ட முண்டம் கூட நமக்கு சொல்ல ஏதோ இருக்கு! அது இன்னும் பொறுமை வேணும் என்கிறதா? அல்லது நாம அவ்வளோ அவசரத்தில் இல்லாம இருக்க கொடுத்து வெச்சிருக்கோம் என்கிறதா? ஏதோ ஒண்ணு! குறைஞ்சது எப்படி எல்லாம் இருக்கக்கூடாதுன்னு கத்துக்கலாம்! அதே சமயம் நாம் மனக்கட்டுப்பாட்டிலேயும் இருக்கலாம்.

No comments:

Post a Comment