4.பத்து
வரை எண்ணுங்க!
இந்த உத்தி ரொம்ப
பழசு.
இருந்தாலும்
வேலை செய்யக்கூடியது.
கொஞ்ச
நேரம் கொடுத்தா மனசு ஆளுகையிலேந்து
புத்தி ஆளுகைக்கு போயிடலாம்
என்கிற தாத்பர்யத்தில வந்தது.
அது
சுமார் 6
செகண்ட்.
ஒன்
தவுசண்ட் ஒன் ந்னு சொன்னாத்தான்
ஒரு செகண்ட்!
அதனால
மெதுவா பத்து வரை எண்ணுன்னு
சொல்லி இருக்காங்க.
இதையும்
ஆழ்ந்த
மூச்சையும்
சேத்து நல்ல பலனளிக்கக்கூடிய
வழியை உருவாக்கிக்கலாம்.
ஆழ்ந்த
மூச்சு ஒண்ணு எடுத்து விட்டு
ஒண்ணுன்னு எண்ணலாம்.
இதே
போல பத்து வரைக்கும்.
பத்து
வரை எண்ண நேரம் இல்லைன்னாலும்
பரவாயில்லை.
எவ்வளவுக்கு
எவ்வளவு முயற்சி செய்யறோமோ
அவ்வளவு பலன் கிடைக்கும்.மீட்டிங்
போல சில நேரங்களில இது முடியாம
போகலாம்.
அதுக்குன்னு
சில உத்திகள் வெச்சிருக்காங்க.
எப்பவும்
தண்ணீர் ஒரு டம்ப்ளர்
வெச்சிருப்பாங்க.
பிரச்சினை
வரும் போது அதை எடுத்து மெதுவா
குடிப்பாங்க.
சாதாரணமா
இந்த சமயத்தில பதில் பேசும்படி
எதிர்பார்ப்பு இல்லை,
ஒரு
இடைவெளி கொடுப்பது வழக்கம்
என்கிறதால சமாளிச்சுடலாம்.
இப்படி
இடைவெளி இல்லாம பட் பட்ன்னு
’பதிலடி’ கொடுப்பதாலத்தான்
நாம் பின்னால வருத்தப்படக்கூடியதை
சொல்லிடுவோம்.
ஜாக்கிரதையா
இருக்கணும்.
No comments:
Post a Comment