9. கனவு
காணுங்கள்!
சுய மேலாண்மையை
கத்துக்கறதுக்கு நிறைய பயிற்சி
தேவை. ஆனா
மிகவும் கஷ்டமான, உங்களால
சமாளிக்க முடியாத நிலை எல்லாம்
அடிக்கடி வரதில்லை.
எப்போதாவதுதானே
வரது? அதுக்குத்தேவையானதை
எப்படி பயிற்சி செய்ய முடியும்.
சிரமம்தான்…..
கனவு காணத்தெரியாத
வரை!
நாம கண்ணால
பார்க்கிறதுக்கும் மனசில
கற்பனை செஞ்சு பார்க்கிறதுக்கும்
மூளைக்கு வித்தியாசம் காணாது!
எம்ஆர்ஐ
ஸ்கேன் செய்து பார்க்கிறப்ப
இது புரியும். அருமையான
சூரிய உதயம் ஒண்ணை பார்க்கும்
போது இருக்கும் நிலையும் அதை
கற்பனை செய்யும் போது இருக்கும்
நிலையும் ஒண்ணாவே இருக்கும்!
மூளையின்
அதே பகுதிகளிலதான் செயல்
தோணும்.
எது நம்மை
அதிகம் செயலிழக்க வைக்குது?
அதிக துன்பம்
தருது? அதை
ஒரு நாடகமா கற்பனை செய்து
பாருங்க.
இதுக்கு
அதிகம் சந்தடி இல்லாத அமைதியான
இடம் நல்லது. ம்ம்ம்ம்
படுத்த பிறகு தூங்கும்
முன்னேன்னு வெச்சுக்கலாமா?
சௌகரியமா
படுத்துக்கொண்டு நல்லா மூச்சு
இழுத்துவிட்டு கற்பனையை
ஆரம்பிக்கலாம். அலுவலகத்தில
மேலதிகாரிகிட்ட பயப்படறோமா?
ரைட்!
இப்ப கற்பனையை
ஆரம்பிக்கிறோம். வேலையை
முடிச்சுக்கொண்டு பேப்பரெல்லாம்
எடுத்துக்கொண்டு அவர்
அறைக்குப்போறோம். பேப்பரை
சரியா படிக்காம அவர் ‘காச்
மூச்’ன்னு கத்தறார்.
நாம அமைதியா
‘இல்லை சார்’ ந்னு ஆரம்பிச்சு
விளக்கறோம். அவரும்
அதை ஏத்துக்கறார்.
‘குட்ஜாப்’
ந்னு பாராட்டறார். நாம
புன்னகையோட சந்தோஷமா திரும்பி
வரோம். அஹ!
புரியறதில்லையா?
கனவு காணச்சொன்ன
கலாம் வாழ்க!
No comments:
Post a Comment