Monday 19 December 2016

11. என்ன செய்ய முடியும்ன்னு பாருங்க!

 11. என்ன செய்ய முடியும்ன்னு பாருங்க!
முடியாததுன்னு எப்பவும் இருக்கவே இருக்கும், அது பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கட்டும். ஏன் அதிலேயே கவனமா இருக்கணும்?
செய்திப்பத்திரிகையை பாருங்க. முக்காலே மூணு வீசம் ‘கெட்ட’ செய்திகளாவே இருக்கும். இதையே படிச்சுகிட்டு இருந்தா லோகத்திலே நல்லதே நடக்கலைன்னு தோணும். நிஜமா அப்படியா இருக்கு? இது ஒரு மூளைச்சலவை!
வாழ்க்கை நாம் எதிர் பார்க்கிறாப்போல நல்லதா இல்லை. அதுக்கு என்ன செய்ய முடியும்? “உன்னால ஒண்ணும் செய்ய முடியாது. அது உன் தலையெழுத்து. எல்லாம் கர்மாப்படி விதிப்படிதான் நடக்கும் ”
இது பல பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லுவதுதான். என்னவோ அவங்ககிட்ட ரகசிய டாக்குமெண்ட் இருக்கா மாதிரியும் அதுல அப்படி எழுதி இருக்கா மாதிரியும்!
அவங்களுக்கு தெரியாதது கர்மா/ விதி என்கிறது முன்னாடி செஞ்சதுக்கு மட்டுமில்லே; இப்ப செய்யறதையும் சேர்த்துதான் பலன் கொடுக்கும்.
அவங்க சொல்லாதது ஒவ்வொரு முறையும் நமக்கு சில தேர்வுகள் இருக்கும் என்கிறதுதான். வரது வரும்தான். ஆனா என்ன செய்யலாம்ன்னு யோசிச்சு வருகிற விஷயங்களுக்கு தகுந்தாப்போல செயலாற்றிக்கொண்டு போக வேண்டியதுதான். எனக்கு ஏஸ் ஸ்பேட் வரலை; நான் ஆட மாட்டேன்னு எல்லாம் சொல்ல முடியாது. இருந்தாலும் நம் பார்வையில சமாசாரங்க என்ன ஏதுன்னு யோசிக்கலாம்தானே? இது அதால நாம் எப்படி பாதிக்கப்படுவோம் என்பதை மாத்தும். நம்மால் ஒண்ணும் முடியாதுன்னு விட்டுப்போக வேண்டியதில்லை.
அரசு அலுவலகங்களுக்குப்போறோம். ஏதோ காரியம் ஆக வேண்டி இருக்கு. சாதாரணமா அங்கே இருக்கறவர் என்ன சொல்லுவார்? இதை ஏன் செய்ய முடியாதுன்னுதான் விளக்குவார். (சரி, சரி, எல்லா ஆஃபிஸ்லேயும் அப்படி இல்லே. எல்லாரும் அப்படி இல்லே.) ஏன்? வேலை செய்யறதுல இஷ்டமில்லை! அதுக்கு ஏதாவது மோடிவேஷன் வேணும். அது இருந்தா உடனே எப்படி செய்ய முடியும்ன்னு சொல்லிடுவார்.

நம்மை நாமே மோட்டிவேட் பண்ணிக்க வேண்டியதுதான்! ஒரு விஷயம் எதிர்படும்போது அதுல இருக்கற எதிர்மறை சமாசாரங்களை மட்டும் பார்க்காம முழுக்கவே பார்க்க கத்துப்போம்! சிலது மேல நமக்கு கட்டுப்பாடோ ஆளுகையோ இராது. அதுக்காக? மீதி இருக்கறதுல நாம செய்யக்கூடியது என்னன்னு பார்க்கலாம்.

No comments:

Post a Comment