15. உடற்பயிற்சி
இது
நல்லதுன்னு எல்லாருக்கும்
தெரியும். இருந்தாலும்
“செய்ப்பா!” ந்னு
யாரானா சொல்ல வேண்டி இருக்கு!
பள்ளி,
கல்லூரி
காலங்களில நாம் பாட்டுக்கு
நிறைய விளையாடுவோம்.
அப்ப தனியா
உடற்பயிற்சின்னு வேண்டி
இருக்காது. அப்புறம்
படிப்பு முடிச்சு வேலைன்னு
போகிற காலத்தில வாழ்க்கை
ரொடீனே மாறிப்போகும்!
(இந்த
காலகட்டத்தில தப்பினாக்கூட
பிறகு திருமணம்ன்னு ஒண்ணு
ஆன பிறகு மாட்டிப்போம்!)
அப்ப குறிப்பா
இல்லைன்னா இதை நிறுத்திடுவோம்.
யாருக்கு
நேரம் இருக்கு? பிறகு
டாக்டர் சொல்லணும் உடற்பயிற்சி
தேவைன்னு! அது
வரைக்கும் நடக்காது.
எப்போதேனும்
ஏதேனும் படிக்கறப்ப அட ஆமா,
உடற்பயிற்சி
திருப்பி ஆரம்பிக்கணும்ன்னு
நினைப்போம்.
தூக்கத்துக்கு
அடுத்ததா ஏதேனும் நமக்கு
ஓய்வு கொடுத்து ரிஃப்ரெஷ்
செய்து மனசை சுத்தப்படுத்தறதுன்னா
அது உடற்பயிற்சிதான்!
விளையாட்டிலேயோ
பயிற்சியிலேயோ மனசு
ஈடுபடும் வரை வேற அசுத்தங்கள்
அங்க படியாது. வயசாச்சு
முன்னே மாதிரி ஆடி ஓடி பயிற்சி
செய்ய முடியாதுன்னாலும்
தோட்ட வேலை, யோகா,
மசாஜ்,
பூங்காவில
நடைன்னு ஏதாவது இருக்கணும்.
இதெல்லாம்
உடம்பில எண்டார்பின் செரோடினின்
ந்னு பல ரசாயனங்களை உலவ விட்டு
நம்மை சந்தோஷமாகவும் விழிப்புடணும்
இருக்கச்செய்யும். நல்ல
முடிவெடுக்கறது,
திட்டமிடறது,
ஒருங்கிணைக்கிறது,
அறிவு பூர்வ
சிந்தனைன்னு சில இடங்களில
மூளையை தூண்டுது.
நேரம்
இல்லைன்னு சொல்லறதே தப்பு.
சாப்பிட
நேரம் இல்லைன்னு சொல்லறதில்லை.
தூங்க நேரம்
இல்லைன்னு சொல்லறதில்லை.
வாய்
சுத்தமா இருக்க பல் தேய்க்க
நேரம் இல்லைன்னு சொல்லறதில்லை.
அது போலவே
இது மூளையை சுத்தம் செய்து
ரீசார்ஜ் செய்யுதுன்னு
நினைச்சா நாம நேரம் ஒதுக்குவோம்.
No comments:
Post a Comment