12. உடல் மொழியும்
உணர்ச்சியும் ஒத்துப்போகிறதா?
என் பெரியப்பா
ஒரு கதை சொல்லுவார். பல
வருஷங்களூக்கு முன்னே நடந்தது.
ஒரு தனவந்தர்
தன் வீட்டில் திருடு போய்விட்டதுன்னு
போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு கடிதம்
எழுதி வேலைக்காரன்கிட்ட
கொடுத்து அனுப்பினார்.
அதை போலீஸ்
ஸ்டேஷன்ல வாங்கி வேலைக்காரன்கிட்ட
விவரம் கேட்டுகிட்டு இருந்தாங்க.
அந்த சமயம்
ஒரு கேஸ் விஷயமா வேறு இடத்திலிருந்து
ஒரு இன்ஸ்பெகடர் அங்கே வந்தார்.
நடக்கறதை
பாத்துட்டு சிரிச்சுண்டே
“இந்த வேலைக்காரந்தான்
திருடன்; பிடிச்சு
சரியான படி விசாரிங்க” ன்னு
சொன்னாராம். ’விசாரிப்ப’
வேலைக்காரனும் குற்றத்தை
ஒப்புக்கொண்டானாம்.
சில சமயம்
குற்றவியல் போலீஸார் சிலரை
சந்தேகத்துல பிடிச்சு
விசாரிப்பாங்க. பிடிச்ச
ஆசாமி உண்மையத்தான் சொல்றாரான்னு
எப்படி கண்டு பிடிக்கறது?
உடல் மொழின்னு
ஒண்ணு இருக்கு. கைகள்
கால்கள், பேச்சு,
முகம்
இதெல்லாமும் பேசும்.
அதன் மொழி
தெரிஞ்சவங்க அதை சரியா படிக்க
முடியும்! இதுக்கும்
காட்டுகிற/ காட்டறதா
நினைக்கிற உணர்ச்சிக்கும்
ஒத்து போறதான்னு பார்க்கணும்.
ஒத்துப்போச்சுன்னா
உண்மை; இல்லைன்னா
பொய். தேர்ந்த
நடிகரால மட்டுமே இதை பொய்யா
இருக்கறப்ப உண்மை போல காட்ட
முடியும்.
நாம சரியா
சுய மேலாண்மை செஞ்சு கொண்டு
இருந்தா உடல் மொழி உணர்ச்சிகளை
பிரதிபலிக்கும். மேலாண்மை
சரியில்லைன்னா உணர்ச்சி
நம்மை மேலாளும். அப்ப
உடல் மொழி நம்மை காட்டிக்கொடுத்துடும்.
உணர்ச்சிகளை
கட்டுப்படுத்தணும்ன்னு
சொல்லிண்டு குதி குதின்னு
குதிச்சுகிட்டு இருந்த
ப்ரெஞ்சுக்காரர் ஏனோ நினைவுக்கு
வரார்!
2009 ல ந்யூயார்க்
விமான நிலையத்தை விட்டு
கிளம்பின ஒரு விமானம் ஒரு
பறவைக்கூட்டத்தில் நுழைந்து
விட்டது. பறவைகள்
எஞ்சின்களில் மாட்டி இரண்டு
எஞ்சின்களும் செயல் இழந்தன.
விமானத்தை
ந்யூயார்க் ஹட்சன் நதியில்
இறக்கினார் பைலட் சல்லன்பெர்கர்.
சரியான
கோணத்தில வேகத்தில் இறக்கலைன்னா
விமானம் உடஞ்சு சிதறிடும்.
இருந்தாலும்
தன் மூளையில ஒலிக்கற எச்சரிக்கை
மணி எல்லாத்தையும் ஆஃப்
செஞ்சுட்டு விமானத்தை சரியா
இறக்கறதில கவனம் செலுத்தி
வெற்றி பெற்றார். உயிரிழப்பு
எதுவும் இல்லை.
https://en.wikipedia.org/wiki/US_Airways_Flight_1549
உணர்ச்சிகளை
ஆள விட்டு இருந்தா உடலும்
இந்த அவசர வேலைக்கு ஒத்துழைச்சு
இருக்காது. இந்த
மாதிரி சமயங்களில என்னத்தான்
பயமா இருந்தாலும் அதை
வலுக்கட்டாயமா ஒதுக்கிட்டு
செய்ய வேண்டியதில கவனம்
செலுத்தனும்.
No comments:
Post a Comment