Friday 9 December 2016

5. ஆறப்போடு.

ஆறப்போடு.


வார் அண்ட் பீஸ் என்கிற தன் புத்தகத்தில் லியோ டால்ஸ்டாய் எழுதுகிறார்

போர் வீரர்களிலேயேவலிமை மிக்க இருவர் காலமும் பொறுமையும். ஏனெனில் அவர்கள் நிலையை மாற்றிவிடுவார்கள், வலியை குறைப்பார்கள், தெளிவை கொடுப்பார்கள். சில சமயம் நாம் மிகவும் துன்பப்படுகிறோம். திருப்தி இல்லாமல், வலியுடன் கலக்கத்துடன்…. இதை தாங்க முடியாமல் தவிர்க்கவே எதையாவது செய்து விடுகிறோம். ஒரு வேளை இதை நாம் ஒரு மணி நேரம், ஒரு நாள், ஒரு வாரம்…. தள்ளிப்போட முடிந்தால் நிலை நம் புரிதலுக்கும் கட்டுக்குள்ளும் வந்து விடக்கூடும். உணர்ச்சிகளுக்கும் தடை போடப்படும்

சொல்ல எளியதுதான். ஆனாலும் பல சமயத்தில் இது மட்டுமே போதுமானதாக இருக்கும்.

No comments:

Post a Comment