3.
உங்கள்
இலக்குகள் என்ன?
வெளிப்படையா
அறிவியுங்க.
சிலர்
இருக்கிறாங்க.
இன்னது
இப்படி செய்ய வேண்டும்ன்னு
முடிவெடுக்கறாங்க.
செய்யறாங்க!
ரொம்ப
சிம்பிள் இல்லே?
ஆனா
நாம எல்லாரும் அப்படி இல்லே.
வீராவேசத்துடம்
ஆரம்பிப்போம்.
போகப்போக
உற்சாகம் குறையும்.
நாளாவட்டத்தில
விட்டுடுவோம்.
இவங்களுக்கு
நல்ல ஒரு உத்தி என்னன்னா
செய்யப்போறதை வெளியே
எல்லார்கிட்டேயும் சொல்லறதுதான்.
செயல்
குறைவானா ‘அட!
மத்தவங்களுக்கு
தெரிஞ்சா என்ன சொல்லுவாங்க’
ன்னு
ஒரு வெட்கம் வந்து தடை போடும்.
இல்லைனாலும்
ஒரு சிலராவது “ஏம்பா,
இன்ன
வேலை எப்படி போகுது?”
ந்னு
கேப்பாங்க.
அல்லது
மாறா நடக்கும்போது “இப்படி
ஒரு இலக்கு வெச்சுகிட்டு
இப்படி செய்யறியே”ன்னு
இடிந்துரைப்பாங்க.
ஆக
சோம்பேறித்தனமா இல்லாம
நிர்ணயிச்சதை செய்ய ஒரு உபாயம்
கிடைக்கும்!
காலை
அஞ்சு மணிக்கு உடற்பயிற்சியா
நடைக்கோ ஓட்டத்துக்கோ
போகணும்ன்னா யாரேனும்
அந்த நேரத்துக்கு வந்து ‘வாடா
போலாம்’
என்கிறது
ஒரு நல்ல தூண்டுதல்.
ஒரு
காலகட்டத்துல என் உதவி சர்ஜன்
“என்னை தினமும் நடை பயிற்சி
செஞ்சயான்னு விசாரி.
இல்லைன்னா
திட்டு!”
ந்னு
சொல்லி இருந்தார்!
இப்படி
நம்
மேலே அக்கறை இருக்கறவங்களா
பாத்து அவங்களை இன்வால்வ்
பண்ணனும்.
உன்னால
முடியாதுன்னு உற்சாகத்தை
குறைக்கிறவங்ககிட்டே இல்லே!
ஒத்தர்
எப்பவும் தான் இன்ன தேதிக்கு
முன்னே வேலையை முடிச்சுடுவேன்ன்னு
பெட் கட்டுவாராம்.
புரியுதில்லே?
உதவி சர்ஜன்
நடந்தாரா ந்னு கேக்கறீங்களா?
கொஞ்ச
நாள் போனதும் அந்த வேண்டுகோளை
வாபஸ் வாங்கிட்டார்!
No comments:
Post a Comment