16. நிச்சயமாக
வரும் மாறுதல்கள்.
லோகத்தில
எது நிச்சயமோ இல்லையோ எல்லாமே
எப்பவுமே மாறிக்கிட்டேத்தான்
இருக்கு என்கிறதுதான் நிச்சயம்.
நாம் நாளை
படுக்கையை விட்டு எழுதுக்கறதே
நிச்சயமில்லை என்கிற போது,
நாம் நடத்தற
நிறுவனம், வியாபாரம்,
தொழில்
எல்லாம் மாறாம அப்படி நல்லா
ஓடிகிட்டு இருக்கும் என்கிறது
என்ன நிச்சயம்?
பல
விஷயங்கள் நம்ம கட்டுப்பாட்டுல
இல்லை. ஏன்,
நம்ம மனசே
நம்ம கட்டுப்பாட்டுல இன்னும்
இல்லை. ஒரு
நேரம் மாதிரி இன்னொரு நேரத்தில
இல்லை.
ஒரு
காரியம் தடை இல்லாம நடக்க பல
காரணிகள் சரியா இருக்கணும்.
பெரிய நம்பிக்கை
வைச்ச பல விஷயங்கள் மாறாம
அப்படியே இருக்கும்ன்னு
எதிர்பார்க்க முடியாது.
நாம முடிஞ்ச
வரைக்கும் இதை எல்லாம்
கட்டுப்பாட்டில வெச்சுக்க
முயற்சி செய்யலாமே ஒழிய
எப்பவும் முழுக்க கட்டுப்பாட்டில
வைக்க முடியாது. அதனால
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
மாற்றங்கள் வந்தே தீரும்,
அப்படி
மாற்றம் வரும் போது நாம
அதிர்ச்சிக்கு உள்ளாகாம
இருக்க என்ன செய்யணும்?
மாற்றத்தை
எதிர்பார்க்கணும். என்ன
மாற்றம் வரக்கூடும்?
அப்படி வந்தா
என்ன செய்யணும்? இதை
முன் கூட்டியே யோசிச்சு வெச்சா
பிரச்சினை இராது. மாற்றம்
வரும் போது பெரிய அளவில
அதிர்ச்சி ஏற்படாது.
அதன் கூடவே
வரக்கூடிய பயம் முதலியனவும்
வராது. ஏற்கெனெவே
என்ன செய்ய முடியும்ன்னு
யோசிச்சு வெச்சிருக்கறதால
‘என்ன செய்வோம்?’ ன்னு
ஒரு திகைப்பு வராது.
அனாவசியமான
மன உளைச்சல்களை தவிர்க்கலாம்.
இதற்காக
வாரம் ஒரு முறை சில நிமிஷங்கள்
ஒதுக்கினாக்கூட போதும்.
என்னென்ன
மாற்றங்கள் வரலாம்.
அப்படி வந்தா
என்ன செய்யலாம். ஒரு
பேப்பர்ல எழுதிப்பாருங்க.
No comments:
Post a Comment