சுய
மேலாண்மை:
சுய மேலாண்மை
என்பது நம் உணர்ச்சிகளை
அறிந்திருந்து என்ன செய்யலாம்
என்று புத்தி பூர்வமாக
தேர்ந்தெடுத்து செய்வது.
இது வெறுமே
பெரிய மூச்சு எடுப்பதும்,
உணர்ச்சிகள்
வலுவாக எரிமலை போல மேலெழும்போது
நம்மை கட்டுக்குள் வைத்துக்கொள்வதும்
மட்டும் இல்லை. இந்த
சமயங்களில் உணர்ச்சிகளை
கட்டுக்குள் வைப்பது பெரிய
சமாசாரம்தான். இவை
எரிமலை போல குமுறி மேலெழும்
முன்னே அடித்தளத்தில் நிறைய
கடமுடா இருக்கும்! இந்த
கடாவையும் முடாவையும் இனம்
கண்டு கொண்டு அதுக்கு தேவையானதை
முன் கூட்டியே செய்யணும்.
ரொம்பவே
தெளிவாக நம்மோட சுய ஆளுமை
நம்மை நாமே அறிவதில்-
அந்த
விழிப்புணர்வில் இருக்கிறது.
நாம் இன்ன
இன்ன விதத்தில் சரியாக இல்லைன்னு
தெரிஞ்சாத்தானே நம்மை நாமே
சரி செய்துகொள்ள முடியும்?
வினை >
உணர்ச்சி>
எதிர்வினை
ந்னு இருக்கிற வரிசையில கடைசி
ரெண்டுக்கும் இடையில சுய
அறிதல் புகுந்தாத்தான் நாம
நம்மை நல்லா ஆள முடியும்.
வினை >
உணர்ச்சி>சுய
அறிதல்> எதிர்வினை
இது நடக்க
நடக்கத்தான் நாம் இயல்பா
சரியா நடந்துக்கொண்டு நம்
வெற்றிக்கு நாமே தடையா இல்லாம
இருப்பது நடக்கும்.
நாமும்
மத்தவங்க நம்மை வெறுக்காம
இருக்கும்படி நடந்துப்போம்.
சிக்கலான
சூழ்நிலைகள் எழுந்தா நாம
சாமர்த்தியமா காய் நகர்த்தி
வெற்றி பெறுவோம். தப்பான
வழியில நம்ம மனக்குதிரை
போச்சுன்னா லகானை பிடிச்சு
திருப்பிடுவோம். நிலைமைக்கு
தகுந்த படி நெகிழ்ந்து கொடுத்து
எதானாலும் எதிர்வினைக்கு
பல தேர்வுகளை பார்த்து எது
நல்லதுன்னு புத்தி பூர்வமா
முடிவு பண்ணி செயல்படுவோம்.
இதெல்லாம்
எதுவுமே இல்லைன்னா,
நமக்குத்தெரிஞ்சோ
தெரியாமலோ உணர்ச்சிகள் நம்மை
ஆளுதுன்னா தினசரி அவற்றோட
கட்டுப்பாடில இருந்து கொண்டு
அவற்றால ஆட்டுவிக்கப்பட்டு
வாழ்கை நம் கட்டுப்பாடில
இல்லாம போயிடும்.
அடுத்ததா
நாம் பார்க்கபோகிறது இதற்கான
பயிற்சிகள்.
No comments:
Post a Comment