3. சரியான நேரம்தான் எல்லாமே!
ஆயிரத்தெட்டு
விஷயங்களைப்பத்தி பேசறப்ப
சரியான நேரம்தான் எல்லாமேன்னு
சொல்லுவாங்க. அது
இந்த மக்களையும் அவங்களோட
உணர்ச்சிகளையும் மேலாளறதுல
இது ரொம்பவே கரெக்ட்!
ஒத்தர்
கோபமாவோ டென்ஷனோடயோ இருக்கறப்ப
நாம போய் ஒரு உதவி வேணும்ன்னு
கேட்கறதில்லை. வியாபாரம்
நல்லா நடக்கலைன்னு தெரியறப்ப
யாரும் நிதி உதவி கொடுன்னு
போய் கேட்க்கமாட்டாங்க.
இதை
பயிற்சி செய்ய கேள்வி கேட்க
ஆரம்பியுங்க. அதுக்கு
சரியா நேரம், சரியான
வாக்கிய அமைப்பு, சரியான
மனநிலை இருக்கணும்.
கூடவே
மற்றவரைப்பத்திய உணர்வு
மனசில இருக்கணும்.
ஒரு
உதாரணம் பார்க்கலாம்.
சக
ஊழியரோட ஒரு ப்ராஜக்ட்ல ஈடு
பட்டு இருக்கோம். இதுக்கு
என்ன செய்யலாம்ன்னு யோசிச்சு
அதைப்பத்தி பேச்சு வார்த்தை
நடத்த வேண்டிய நாள் இன்னைக்கு.
அலுவலகத்தில
சந்திக்கறோம். அவரோ
தன் பக்கத்துல இருக்கறவர்கிட்ட
தன் பசங்க நடந்துக்க விதம்
குறிச்சு புலம்பிக்கொண்டு
இருக்காங்க. அவங்களை
கண்ட்ரோல் பண்ணறதைப்பத்தி;
அவங்களோட
இயலாமைதான் முக்கிய விஷயம்.
நாம
போய் உடக்கர்ந்துக்கறோம்.
அவங்க புலம்பலை
நிறுத்திட்டு நம்மை பார்க்கறாங்க.
இப்ப
நாம் என்ன சொல்லணும்?
“ஹிஹிஹி
அந்த ப்ராஜக்ட் சமாசாரம் …
என்ன ஐடியா பண்ணி இருக்கீங்க?”
அவங்க
நம்மை வினோதமான ஜந்துவை
பார்க்கிறா மாதிரி பார்க்கிறாங்க.
தலையை
தொங்கப்போட்டுக்கறாங்க.
நம் உரையாடல்
முடிஞ்சுடுத்து.
நம்மை
பொருத்த வரை? இது
சரியான நாள்தான்; முன்னேயே
முடிவானதுதானே? கேள்வியும்
சரிதான். அதுதானே
கேட்க வேண்டியது? ஆனா…
ஆனா? ஆனா
அடுத்த நபரை பொருத்த வரை
நேரம், கேள்வி,
மனநிலை
எதுவுமே சரியில்லே.
அதனால
நினைவு வெச்சுக்க வேண்டியது
ஒரு பொது காரியம் நடக்கணும்ன்னா
நாம சரியா இருந்தா மட்டும்
போறாது. ‘மத்தவங்க’
என்கிறது ஒரு முக்கியமான
சமாசாரம்.
என்ன
செஞ்சு இருக்கலாம்?
“அடப்பாவமே!
ரொம்ப
கஷ்டம்தான். நான்
ஏதாவது உதவி பண்ண முடியுமா?”
ந்னு
கேட்டிருக்கலாம். நிஜமாவே
முடிஞ்சா உதவி செய்ய முயற்சிக்கலாம்.
அவங்க கொஞ்சம்
சுதாரிச்சுக்கொண்டு சரியான
நிலமைக்கு வந்த பிறகு வேறு
ஏதாவது விஷயம் கொஞ்சம் பேசிட்டு
“இப்ப உங்க நிலைமை கொஞ்சம்
பிரச்சினைதான், இப்ப
இது பத்தி விவாதிக்கறது உசிதமா
இல்லாட்டாலும், வேலை
நடக்கணுமே? அதனால
நம்ம ப்ராஜக்ட் பத்தி கொஞ்சமா
பேசலாமா? ஏதேனும்
யோசிச்சு இருக்கீங்களா?
விரிவா
அப்புறம் பேசிக்கலாம்…..
இந்த ரீதியில
கொண்டு போயிடலாம்.
No comments:
Post a Comment