Wednesday 21 December 2016

13. வேற யார்கிட்டேயாவது பேசுங்க!

13. வேற யார்கிட்டேயாவது பேசுங்க!

உணர்ச்சிகளை ஒதுக்கிட்டு புத்தி பூர்வமா செயல்படணும் என்கிறது சரிதான். ஆனா இங்கே ஒரு பிரச்சினை இருக்கே!
என்ன செய்யலாம்ன்னு நமது புத்திக்கு எட்டியதைதானே யோசிப்போம். ஒரு வேளை நாம அவ்ளோ புத்திசாலியா இல்லைன்னா?
அத்தோட ஒரு கோணத்தில யோசிக்க ஆரம்பிச்சா அதே எப்பவும் நமக்கு நல்லதா தோணும்; மற்ற வழிகளை போதிய அளவுக்கு யோசிக்க மாட்டோம்.
என்ன செய்யலாம்?
நம்பிக்கைக்கு பாத்திரமான, பிரச்சினைல உணர்ச்சி பூர்வமா சம்பந்தம் இல்லாத ஒத்தர்கிட்டே இந்த விஷயம் பத்தி பேசலாம். அவர்கிட்ட இப்படி இப்படி பிரச்சினை இருக்கு. எனக்கு தெரிஞ்சபடி இப்ப இப்படி எல்லாம் தேர்வு இருக்கு. இதுல இப்படி செய்யலாம்ன்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?
இப்படி பேச முடிஞ்சாலே நமக்கு பாதி மன இறுக்கம் குறைஞ்சுடும். அவரும் சில வழிகளை முன் வைக்கக்கூடும். பிறகு நாம் யோசிச்சு நம்ம பொறூப்பில முடிவெடுக்கலாம். (பலரும் செய்யறது இங்கே ஒரு முடிவு எடுத்துவிட்டு, தான் நினைச்சபடியே சொல்லறவங்களை கிடைக்கும் வரை தேடி சொல்லிட்டு அப்புறம் செய்யறது. தப்பா போச்சுன்னா திட்ட ஒரு ஆள் இருக்கே!)
முக்கியமான விஷயம் என்னன்னா தேர்ந்தெடுக்கற நபருக்கு நாம் கேட்கிற விஷயத்தில் உணர்ச்சி பூர்வமான சம்பந்தம் இருக்கக்கூடாது என்கிறதுதான். அப்படி இருந்தா அவர் சொல்கிறதுல அவரோட‘சொந்த அபிப்ராயம்’ கலந்து இருக்கும். அது அவ்ளோ சரியா இருக்கும்ன்னு சொல்ல முடியாது.
அதே மாதிரி நாம் எப்ப எது சொன்னாலும் ‘கரெக்டு’ ந்னு சொல்ற ஆசாமியா இருக்கக்கூடாது! மாறா ‘கோணக்கழி’ போடற ஆசாமியா இருந்தா பரவாயில்லை! அந்த நேரத்துக்கு அது கசப்பா இருந்தாலும் வித்தியாசமான கோணங்கள் கிடைக்கும்!

No comments:

Post a Comment