Tuesday 24 January 2017

1. வெளிப்படையாகவும் ஆர்வத்துடனும் இருங்க.

1. வெளிப்படையாகவும் ஆர்வத்துடனும் இருங்க.
இதை கேட்டதும் உங்களுக்கு தோணலாம் “ஏன்யா வம்பு? நாம் பாட்டுக்கும் நம்ம வேலையை பாத்துகிட்டு போகலாமில்லே? ஏன் மத்தவங்ககிட்ட வெளிப்படையாவும் ஆர்வத்துடனும் இருக்கணும்?”
ஏன்னா அது உங்க வேலையில ஒரு பகுதி. வேலையில சேரும்போது யாரும் இதையும் ஒரு கண்டிஷனா சொல்லலைதான்; இருந்தாலும் நீங்க இன்னும் ஒரே ஒருத்தர்கூட சேர்ந்து வேலை செஞ்சாலும் அவரோட நல்ல ஒரு உறவு வெச்சிருக்கணும் என்கிறது எதிர்பார்க்கப்படுது. அப்பத்தான் நீங்க முழுசா வெற்றிகரமா செயல்பட முடியும்.
இந்த வெளிப்படை என்கிறது இங்கே என்ன?
நம்மைப்பத்திய தகவல்களை மத்தவங்ககிட்ட பகிர்ந்து கொள்ளணும். எந்த அளவு என்பதை நாமே முடிவு பண்ணிக்கலாம். நாம் சின்ன வயசுல அம்மாவோட அஞ்சறைப்பெட்டிலேந்து காசு திருடி சோன்பப்டி வாங்கி சாப்டதை பகிர்ந்து கொள்ளணும்ன்னு சொல்லலை. நமக்குன்னு ஒரு தனி இடம் இருக்கு. அதை வெளிப்படை ஆக்கத்தேவையில்லை. யாருக்கு எவ்வளவு தெரியணுமோ அவ்வளவு. மேலும் எது அப்படி ஒண்ணும் ரகசியம் இல்லையோ அது.
ஏன்?
அப்பத்தான் நம்மைப்பத்தி தப்பான ஒரு கற்பனையில் அவங்க இருக்க மாட்டாங்க. அது முக்கியம். முன்னேயே சொன்ன உதாரணப்படி நாம எதையும் யோசிச்சே கருத்து சொல்லுவோம்ன்னு சொல்லி இருந்தா இவனுக்கு ஒண்ணும் தெரியலை; கருத்தே இல்லைன்னு தப்பா நினைக்கமாட்டாங்க. நமக்கு சென்சிடிவான எதையாவது செஞ்சுட்டு “ஓ! நீ தப்பா எடுத்துக்க மாட்டேன்னு நினைச்சேன்” ந்னு சொல்ல மாட்டாங்க.
இந்த “அப்படின்னு நினைச்சேன்” போல கடுப்படிக்கிற விஷயம் கிடையாது. ஏன் முன்னேயே ஒரு கருத்தை உருவாக்கிக்கணும்? அப்புறம் அதுபடி நடந்துட்டு அது தப்புன்னு தெரிஞ்சப்பறம் சாரி ந்னு அசடு வழியணும். சந்தேகம் இருந்தா கேட்கலாமே? “சந்தேகம் இருந்தாத்தானே? இதைப்பத்தி யோசிச்சதே இல்லையே?” ந்னு சொல்லறிங்களா? அதுவும் சரிதான்! :-))
மீட்டிங் எல்லாம் குறிச்ச நேரத்துக்கு ஆரம்பிச்சு முடிக்கறது உங்க பழக்கமா இருந்தா அதை வெளிப்படையா சொல்லிடுங்க. அப்பத்தான் யாரும் “அட! நாலு மணி மீட்டிங் ஆரம்பிச்சுடுத்தா? இப்ப நாலரைதானே ஆறது?” ந்னு சொல்லாம இருப்பாங்க!
அதே போல மத்தவங்களைப்பத்தி தெரிஞ்சுக்க கொஞ்சம் ஆர்வமா இருக்கணும். அதுக்குன்னு அவரோட அந்தரங்க விஷயங்களைப்பத்தி கேள்வி கேட்கலாம்ன்னு சொல்லலை. உதாரணமா மேலே சொன்னதை ஒட்டி, யாரும் நாலு மணிக்கு மீட்டிங் ந்னு சொன்னா “அப்ப நாலு மணிக்கு ஆரம்பிச்சுடுமில்லே? இல்லை லேட்டாகுமா” ந்னு சிரிச்சுக்கொண்டே கேட்கலாம்!
இப்படி மத்தவங்க குணத்தை தெரிஞ்சுக்கொண்டாத்தான் நாமும் அவங்க விருப்பங்களை புரிஞ்சு நம்ம நடத்தையை சரி செஞ்சுக்க முடியும். நாலு மணிக்கு டான்னு ஆரம்பிச்சுடுவேன்னு சொன்னா நாம அஞ்சு நிமிஷம் முன்னாலே போகலாம். அல்லது “ஓ! அது பத்தி நான் ரொம்ப குறிப்பா இருக்கறதில்லை அஞ்சு பத்து நிமிஷம் கூட குறைய ஆகலாம்!” ந்னு சொன்னா, ஒரு வேளை தாமதமாயிடும் பக்ஷத்தில நாம அவசரப்பட்டுண்டு மீட்டிங்குக்கு ஓட வேண்டியதில்லை! எப்படியானாலும் நாமும் அவங்களோட ஒத்துப்போகிரோம் இல்லையா? அது முக்கியம்.
நம்மோட சமூக விழிப்புணர்வு திறமையை காட்டி சரியான நேரத்தில சரியான விதத்தில கேள்விகளை கேட்கணும். அதெல்லாம் அவங்க எடுத்த முடிவுகளை செயல்களை விமர்சிக்கறதா இருக்கக்கூடாது. உதாரணமா “என்ன பிஎஸ்சி பிசிக்ஸ் படிச்சியா? அது எதுக்கு? என்ன பிரயோசனம்?” அட! அவரோட சூழ்நிலை அதை படிச்சார்; என்ன இப்ப? விஷயம் இப்ப அவருக்கு பிசிக்ஸ் பின்புலம் இருக்கு. நாம எடுத்துக்கற விஷயம் பிசிக்ஸ் சம்பந்தப்பட்டதா இருந்தா அவர்கிட்டேந்து நல்ல பங்களிப்பு வர வாய்ப்பிருக்கு. அவ்ளோதான்!
விஷயங்களை பகிர்ந்து கொள்ளக்கொள்ள ஒரு நாள் அவர் தன்னோட அந்தரங்க விஷயங்களைக்கூட பகிர்ந்து கொள்ள ஆரம்பிப்பார். அப்ப உறவு வலுவாயிடுத்துன்னு பொருள். அதே சமயம் அவர் வைத்திருக்கிற நம்பிக்கையை கெடுத்துக்கக்கூடாதுன்னு ஒரு ஜாக்கிரதை உணர்வும் வரணும். இப்படி வெளிப்படையா மத்தவங்ககிட்ட பேசப்பேச உறவு வலுப்படும். நாம் அவங்கிட்ட காட்டற அக்கறையை அவங்க பாராட்டுவாங்க. அது உறவை வலுவாக்கும். அட! நமக்கு என்ன வேணும், நம்ம தேர்வு என்னன்னு அக்கறைப்படக்கூட ஒரு ஜீவன் இருக்கே! ந்னு நினைப்பாங்க. அதே சமயம் அது எல்லை மீறி - குறிப்பா எதிர் பாலினம் ஆனா- உறவை வேற விதமா கொண்டு போயிடாம பாத்துக்குங்க.

அவ்வப்ப யாரோட உறவுகள் இப்படி இன்னும் பலப்படுத்த வேண்டி இருக்குன்னு கவனிச்சு கொஞ்சம் நேரத்தை அதில செலவழிங்க!

No comments:

Post a Comment