Friday 27 January 2017

4. சின்னச்சின்ன விஷயங்கள்; பெரிய விளைவுகள்

4. சின்னச்சின்ன விஷயங்கள்; பெரிய விளைவுகள்

ஒரு கடைக்குபோகிறோம். ஒரு பொருள் கேட்கிறோம். அது உடனடியா கிடைக்கலை. கடைக்காரர் கொஞ்சம் சிரமப்பட்டு தேடி எடுத்துக்கொடுக்கிறார். இல்லை உடனடியாத்தான் எடுத்துக்கொடுக்கறார்; என்ன இப்போ? பொருளை வாங்கிக்கொண்டு காசை கொடுத்துவிட்டு கிளம்பறோமா? தாங்க்ஸ் ந்னு முக மலர்ச்சியோட சொல்றோமா? உணர்ச்சியே இல்லாம இயந்திரத்தனமா மூஞ்சியக்கூட பாக்காம தாங்க்ஸ்னு சொல்லறோமா? என்ன செய்யறோம்?

சர்வே எடுத்ததுல பெரும்பாலான மனிதர்களின் உணர்ச்சி இப்படித்தான் இருக்காம்: “ஆஆமா! நல்ல வேலை செஞ்சா யார் பாராட்டறாங்க? கேட்டாலும் அது உன் கடமைத்தானே?ன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க!” சர்வே சொல்லறது என்ன? அப்படி யாரும் சொன்னா அவங்களுக்கு கொஞ்சம் சந்தோஷமா இருக்கும் என்கிறதுதான்.

புருஷன் பொஞ்சாதி சண்டையில் அடிக்கடிப்பார்க்கலாம்.
ஏம்மா இங்க சொம்பில ஜலம் நிரப்பி வெச்சிருந்தேனே? எங்க காணோம்?
அதுவா? தேய்க்க போட்டுட்டேன்.
தேய்க்கப்போட இதுவா நேரம்? பூஜை நேரத்துலதான் அதை செய்யணுமா?
ஆமா சொம்பு அவ்ளோ நல்லா இருந்தது. தேய்க்க முகூர்த்தம் வேற பாப்பாங்களாக்கும்?
இப்ப ஜலத்துக்கு எங்க போக? மடியா பிடிச்சு வெச்சு இருந்ததை ஏன் கொட்டினே?
வேற பிடிச்சுக்கோங்களேன். என்ன இப்ப?
ஆமா செய்யறதை செஞ்சுட்டு… ஒரு சாரி கூட வாய்லேந்து வராது!
சாஆஆஆரி. சரியா இப்ப?

சொல்லற விதத்திலேந்தே அது மனசுலேந்து வரலை, உதட்டிலேந்து வந்ததுன்னு புரிஞ்சுடும்!

வர வர ’தாங்க்ஸ்’ ’சாரி; ‘தயை செய்து’ எல்லாம் பழக்கத்திலேந்து காணாமப்போயிட்டு இருக்கு. அதை திருப்பி பழக்கத்துக்கு கொண்டு வரது நல்லது. மனப்பூர்வமா ஒத்தரை பாராட்டினா அது கொஞ்ச நேரமோ இல்லை சமயத்தில நாள் முழுதுமோ அவரை நல்ல ‘மூட்’ல வெச்சு இருக்கும். மனப்பூர்வமா கேட்கிற மன்னிப்பு ஒருவரை கொஞ்சம் ஆறுதலடையச்செய்யும். மனப்பூர்வமா அதை செய்யத்தோணலை என்கிறது நல்ல வாதம் இல்லை. அது அதீத அஹங்காரத்தின் அடையாளம். இப்படி வெளிப்படையா சொல்லப்பிடிக்கலை. இருந்தாலும் சொல்லாம இருக்க முடியலை. உங்களை புண் படுத்தி இருந்தா - சாரி!


இப்படி செய்யாததுக்கு பழக்கம் இல்லை என்கிறதும் காரணமா இருக்கலாம். அல்லது அவசர உலகத்தின் தாக்கமா இருக்கலாம். (ஆமா, அப்படி என்ன அவசரம்? தேங்க்ஸ் சொல்ல எவ்ளோ வினாடி ஆகும்? சரியா அரை வினாடி!) தயை செஞ்சு இதுக்கு கொஞ்சம் கவனம் செலுத்துங்க. இதை அடிக்கடி செய்யக்கத்துப்போமா? கத்துப்போம்! நன்றி!

No comments:

Post a Comment