உறவு
மேலாண்மை உத்திகள்:
சிலர்
புதுசா ஒரு உறவை உருவாக்கிக்கும்போது
நல்லாத்தான் செய்யறாங்க.
ஆனா நாளடைவில்
அந்த உறவை தக்க வைக்க கஷ்டமா
இருக்கு!
என்ன
சமாசாரம்ன்னா எல்லா உறவுகளுக்கும்
- சுலபமா
வரா மாதிரி தோணறதுக்குக்கூட
- கொஞ்சம்
முயற்சி தேவையா இருக்கு.
இத கேட்டு
இருக்கோம்; ஆனா
உள்ளே வாங்கிண்டோமா?
உறவை
வளர்க்கிறதுக்கு தேவை நேரம்,
முயற்சி,
எப்படி என்கிற
அறிவு. இந்த
அறிவே உணர்வுசார்நுண்ணறிவு.
உறுதியா,
காலம் ஆக ஆக
பலப்படுகிற, பரஸ்பரம்
திருப்தி செய்கிற உறவுகள்
வேணுமானால் உறவு மேலாண்மை
என்கிற திறமை வேணும்.
நல்ல காலமா
அதை வளர்த்துக்க முடியும்.
முன்னே சொன்ன
மூணு திறன்களும் வந்தாச்சுன்னா
இது சுலபமே! என்னன்னு
நினைவு இருக்கு இல்லே?
சுய விழிப்புணர்வு,
சுய ஆளுமை,
சமூக
விழிப்புணர்வு…. ரைட்!
நம்
உணர்வுகளைப் பார்த்து நம்
தேவைகள் கிடைக்குதான்னு
தீர்மாணிக்கலாம். நம்மோட
சுய மேலாண்மையை பயன்படுத்தி
நமக்கு தேவையானதை சரியான
விதத்தில சரியான நேரத்தில
சொல்லி உறவிலிருந்து பெறலாம்.
இதில மத்தவங்களோட
தேவைகளையும் உணர்வுகளையும்
சமூக விழிப்புணர்வில் இருந்து
அறியலாம்.
மீதி
இப்ப இருக்கறது அவங்களோட
தேவையை எப்படி பூர்த்தி
செய்யறது என்கிறது. அது
நமக்கும் பாதகமில்லாம
இருக்கணும்!
உறவில
இரண்டு பக்கம் இருக்கு இல்லையா?
நம்மோட பக்கம்
ஒண்ணு; மத்தவங்க
பக்கம் ரெண்டு. ஆக
உறவில 50% பொறுப்பு
நம்மகிட்ட இருக்கு. பின்
வர இருக்கிற 17 உத்திகளை
பயன்படுத்தி நாம சமூக மேலாண்மையை
உறுதி செஞ்சுக்கலாம்.
No comments:
Post a Comment