Thursday 19 January 2017

16. உள்ளதை உள்ளபடி பாருங்க.

16. உள்ளதை உள்ளபடி பாருங்க.
நமக்குன்னு சில நம்பிக்கைகள் இருக்கும்; இது இப்படின்னு ஒரு முன்கூட்டிய தீர்மானம் இருக்கும். சிலதை முக்கியமில்லைன்னு தள்ளிடுவோம். சிலதுக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்போம். இதை எல்லாம் தாண்டி உள்ளதை உள்ளபடி பார்க்க நம்மால முடியுமா? அப்படி பார்க்கக்கூடியவங்க அரிதே. சாதாரணமா நமக்கு கிடைக்கற படம் கொஞ்சம் சாயம் பூசினதுதான்!


அப்படின்னா என்ன செய்யலாம்?
கொஞ்சம் தைரியம் வேணும்; பலம் வேணும்; நேர்மை வேணும். இது கூட ஒரு சர்வே வேணும்!
உதாரணமா நீங்க உலவற சமூக வலைதளத்தில ஒரு சர்வே நடத்தலாம். அதுல வழக்கமா ஆஹா ஓஹோ ந்னு சொல்லறவங்களும் இருக்கணும். நீ சொல்லறது எல்லாம் தப்புன்னு சொல்லறவங்களும் இருக்கணும். கூடவே இடைப்பட்ட எல்லாரும். “தப்பா நினைச்சுக்க மாட்டேன். நேர்மையா பதில் சொல்லுங்க!” ந்னு கேட்டுக்கலாம்.
இந்த பதில்கள் எல்லாம் நமக்கு உவப்பாவா இருக்கும்? ஒண்ணு ரெண்டு இருக்கலாம். அவரவர் பார்வையில நீங்க சொல்லறது செய்யறது சரியா இருக்கலாம்; தப்பா இருக்கலாம்; பழுது பட்டதா இருக்கலாம். அவங்க சொல்லறது தப்பா இருந்தா என்ன செய்ய? ஜீரணிக்க முடியாத பதிலா இருந்தா என்ன செய்ய? உண்மையா இருந்துட்டா? காய்த்தல் உவத்தல்ன்னு இல்லாம எல்லாத்தையும் கேட்டுக்கோங்க. சிலர் தப்புன்னு சொல்லற விஷயத்துக்கு காரணம் இருக்கலாம். சிலது நம்மோட தப்பாவே இருக்கலாம். எப்படியா இருந்தாலும் இது முக்கியம். ஏன்?
நாம தனி ஆளா இருந்துட்டா பிரச்சினை இல்லை. ஆனா நாம் சமூகத்தில ஒரு அங்கம். அதனால மத்தவங்க நம்மைப்பத்தி என்ன நினைக்கிறாங்க என்கிறது முக்கியம்.
நாம் ஒரு மீட்டிங்க்ல உட்கார்ந்து இருக்கோம். ஒத்தர் ஒரு கருத்து சொல்லறார். அது பத்தி நம்ம கருத்தை கேட்க்கறாங்க. நம்ம பழக்கம் எதானாலும் நல்லா யோசிச்சு பதில் சொல்லறது. இந்த யோசிக்கிற நேரத்தில ‘ஓ இவனுக்கு ஒண்ணும் தெரியலை’ ன்னு அடுத்த ஆசாமிய கேட்கப்போயிடலாம். நாளடைவில இவன் ஒண்ணும் பிரயோசனமே இல்லேன்னு நினைச்சு மீட்டிங்க்கே கூப்பிட மாட்டாங்க!
இவங்க இப்படி நினைக்கிறாங்கன்னு மட்டும் நமக்கு தெரிஞ்சு இருந்தா…… அஹா! நாம் யோசிச்சுதான் பதில் சொல்லுவோம் என்கறதை இவங்களுக்கு தெளிவு படுத்தி இருக்கலாமே!
மத்தவங்க நம்மைப்பத்தி என்ன நினைக்கிறாங்கன்னு உறுதியா தெரிஞ்சுக்க நல்ல வழி அவங்களை கேட்க்கறதுதான். இது வரை பாத்த விஷயங்கள் - சுய விழிப்புணர்வு, சுய ஆளுமை, சமூக விழிப்புணர்வு, சமூக ஆளுமை நமக்கு எப்படி இருக்குன்னு அவங்க நினைக்கிறாங்கந்னு தெரிஞ்சுப்போமே! பெரும்பாலும் அவங்க நம்மைப்பத்தி நினைக்கறது நாம் நம்மைப்பத்தி நினைக்கறதை விட சரியாகவே இருக்கும்!

இல்லைன்னாலும் மத்தவங்க நம்மைப்பத்தி என்ன நினைக்கறாங்கன்னு தெரிஞ்சுக்கறது நல்லதே! இதுக்கு ஒரே மாத்து வழி நம்மை நாமே விடியோ படம் எடுத்து மத்தவங்களோட பழகறப்ப என்ன செய்யறோம்ன்னு எல்லாம் கவனிக்கறதுதான்!

No comments:

Post a Comment